கண்ணனை மீண்டும் ஏற்றுக் கொண்ட ‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ குடும்பம் – சீரியலில் அடுத்த ட்விஸ்ட்!
விஜய் தொலைக்காட்சியில் பல்வேறு திருப்பங்களுடன் ஒளிபரப்பாகி வரும் சீரியல் தான் பாண்டியன் ஸ்டோர்ஸ். இந்த சீரியலின் ஷூட்டிங் ஸ்பாட் புகைப்படங்கள் தற்போது வெளியாகி சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.
“பாண்டியன் ஸ்டோர்ஸ்” சீரியல்
விஜய் டிவியில் அனைத்து தரப்பு மக்களும் விரும்பி பார்க்கும் ஒரு சீரியல் என்றால் அது பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் தான். ஆரம்பத்தில் இருந்தே மக்கள் மத்தியில் இந்த சீரியல் பெரும் வரவேற்பை பெற்று இருந்தது. காரணம், நாம் மறந்து போன கூட்டு குடும்ப வாழ்க்கையினை அழகாக மையப்படுத்தி வருகின்றனர். இப்படியாக இருக்க, இந்த சீரியலில் தற்போது கண்ணன் மற்றும் ஐஸ்வர்யா இருவரும் வீட்டினர் அனைவரையும் எதிர்த்து திருமணம் செய்து கொள்கின்றனர்.
தமிழக உள்ளாட்சி தேர்தலுக்கான வாக்குப்பதிவு நேர நிர்ணயம் – அறிவிப்பு வெளியீடு!
இதனால் குடும்பத்தில் மூர்த்தி இருவரையும் வீட்டில் அனுமதிக்க மறுத்து விடுகிறார். வீட்டினர் அனைவருக்கும் கண்ணன் மீது கோபம் இருந்தாலும், கண்ணனின் நிலையினை நினைத்து வருத்தப்படுகின்றனர். இதனால் கதிர் மற்றும் ஜீவா இருவரும் கண்ணனுக்கு தெரியாமல் உதவி செய்து வருகின்றனர். ஒரு புறம் இப்படியாக இருக்க, கண்ணனின் அம்மாவிற்கு கண்ணனை நினைத்து உடல் நிலை மோசமடைந்து விடுகிறது.
செப்.6 ஆம் தேதி அன்று ராமேஸ்வரம் கோயிலில் பக்தர்களுக்கு தடை – மாவட்ட ஆட்சியர் உத்தரவு!
அவரை மருத்துவமனையில் வீட்டினர் சேர்த்து விடுகின்றனர். அவரை பார்க்க வரும் கண்ணனை திட்டி அனுப்பியும் விடுகின்றனர். தற்போது இந்த சீரியலில் நடிக்கும் சுஜிதா, குமரன் மற்றும் சரவணா விக்ரம் ஆகியோர் எடுத்து கொண்ட புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகின்றது.