புது வீட்டில் குடியேறிய ‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ மூர்த்தி, தனம்? கண்ணன், ஐஸ்வர்யா தான் காரணமா!
விஜய் டிவி ‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ சீரியல் நடிகர் ஸ்டாலின் மற்றும் நடிகை சுஜிதா இணைந்து எடுத்துக்கொண்ட சமீபத்திய புகைப்படம் ஒன்று வலைதளங்களில் வெளியாக, அவர்கள் புது வீட்டுக்கு குடியேறியதாகவும் அதற்கு கண்ணன், ஐஸ்வர்யா தான் காரணமா எனவும் கேள்வி எழுப்பி வருகின்றனர்.
பாண்டியன் ஸ்டோர்ஸ்
விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் ‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ சீரியலில் தற்போது வெளியாகி இருக்கும் புதிய எபிசோடு ஒன்றில் கண்ணன் மற்றும் ஐஸ்வர்யா இருவரும் மூர்த்தி வீட்டுக்கு எதிராக இருக்கும் வீட்டில் குடியேறி உள்ளனர். ஏற்கனவே கண்ணன் மற்றும் ஐஸ்வர்யா திருமணத்தை ஏற்றுக்கொள்ளாத ‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ குடும்பம், இப்போது அவர்கள் எதிர்த்த வீட்டுக்கு குடி வந்தது தெரிந்தால் அடுத்து என்ன நடக்கும் என்பதை காண பலரும் ஆர்வமாக உள்ளனர்.
“பாக்கியலட்சுமி” சீரியல் கோபி பற்றிய சின்ன அலசல் – வீட்டில் ஹிட்லர், ஆனால் வெளியே!
இப்போது கஸ்தூரியின் சதி ஆலோசனையின் படி, பாண்டியன் ஸ்டோர்ஸ் குடும்பம் கண்ணனை முற்றிலுமாக வெறுத்து ஒதுக்கிவிடுமா அல்லது இருவரையும் ஏற்றுக்கொள்ளுமா என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும். இதற்கிடையில் ‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ சீரியலின் அண்ணன் மூர்த்தி மற்றும் அண்ணி தனம் அதாவது நடிகர் ஸ்டாலின் மற்றும் நடிகை சுஜிதா இருவரும் ஒரு புதிய வீட்டில் எடுத்துக்கொண்ட புகைப்படம் ஒன்று சமூக வலைதளங்களில் வெளியாகி இருக்கிறது.
விஜய் டிவி “பாரதி கண்ணம்மா” சீரியலின் 39வது வார TRP ரேட்டிங் – ரசிகர்கள் வாழ்த்து!
இந்த புகைப்படத்தை கண்ட ரசிகர்கள் கண்ணன் மற்றும் ஐஸ்வர்யா இருவரும் மூர்த்தி வீட்டுக்கு எதிராக இருக்கும் வீட்டில் குடியேறியதால் தான், ‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ வீட்டில் இருந்து மூர்த்தியும், தனமும் வெளியேறி இருப்பதாகவும், புதிய வீட்டிற்கு குடி வந்திருப்பதாகவும் வலைதளங்களில் தங்களது கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர். என்றாலும் தனம் மற்றும் மூர்த்தியின் இந்த புகைப்படம் சமூக வலைதளங்களில் வெளியாகி பார்வையாளர்களை கவர்ந்து வருகிறது.