“பாக்கியலட்சுமி” சீரியல் கோபி பற்றிய சின்ன அலசல் – வீட்டில் ஹிட்லர், ஆனால் வெளியே!
விஜய் டிவி “பாக்கியலட்சுமி” சீரியலில், குடும்பத் தலைவியான பாக்கியா படும் கஷ்டங்களை பற்றி கதை சென்று கொண்டிருக்கிறது. இந்நிலையில் அந்த சீரியலில் கோபி கதாபாத்திரத்திற்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு இருக்கிறது. அவரை பற்றி இந்த பதிவில் பார்க்கலாம்.
பாக்கியலட்சுமி:
பாக்கியலட்சுமி சீரியலில், குடும்பத் தலைவிகள் ஒரு சிறிய வட்டத்திற்குள் இருந்து கொண்டு வெளியே வர தவிக்கும் நிலையை தத்ரூபமாக காட்டப்பட்டுள்ளது. ஆனால் பெண்கள் பல தடைகள் வந்தாலும் பொறுப்பெடுத்தாமல் தங்களுடைய இலக்கை நோக்கி செல்ல வேண்டும் என்பதை இந்த சீரியல் உணர்த்துவதால் பல பெண் ரசிகர்களை இந்த சீரியல் கொண்டுள்ளது. அது மட்டுமில்லாமல் இந்த சீரியலில் பாக்கியாவின் கணவராக இருக்கும் கோபி, ஒரு பிசினஸ் மேன். அவர் தனது கல்லூரி காதலி ராதிகாவை பற்றியே நினைத்து கொண்டிருக்கிறார்.
விஜய் டிவி “பாரதி கண்ணம்மா” சீரியலின் 39வது வார TRP ரேட்டிங் – ரசிகர்கள் வாழ்த்து!
வீட்டில் அவரது மகனிற்கு திருமணம் முடிந்து குழந்தை பிறக்கப்போகிறது. ஆனால் அவர் தனது காதலியுடன் செய்யும் லீலைகள் இளைஞர்களின் காதல் காட்சிகளுக்கு நிகராக இருக்கிறது. மேலும் பாக்கியாவிடம் மட்டும் காட்டும் வில்லத்தனம் ரசிகர்களை கோபத்தின் உச்சியில் கொண்டு சேர்க்கிறது. மேலும் இந்த சீரியலில் வில்லனாக தற்போது காட்டப்படும் கோபியுடைய காதல் எப்போது அவருடைய மனைவி பாக்கியாவிற்கு தெரியவரும் என்று ஒவ்வொரு நாளும் ரசிகர்கள் ஆர்வத்துடன் சீரியலை பார்த்துக் கொண்டிருக்கின்றனர்.
‘பாரதி கண்ணம்மா’ சீரியல் நடிகை அவன் இவன் படத்தில் செய்த சம்பவம் – ரசிகர்கள் ஷாக்!
ஆனால் இந்த சீரியலில், தப்பு செய்பவர்கள் எல்லாரும் சந்தோசமாக நினைத்ததை செய்கின்றனர். ஆனால் கஷ்டப்பட்டு உழைத்து சம்பாரிக்க நினைக்கும் பாக்கியாவிற்கு தான் பல கஷ்டங்கள் வருகிறது. கடந்த சில தினங்களுக்கு முன்பு ஆயிரம் பேருக்கு சமைத்து கொடுக்க வேண்டும் என்ற ஆடரை எடுத்து, அதை வெற்றிகரமாக முடித்த பாக்கியலட்சுமி தனக்கு கிடைத்த மூன்று லட்சத்தை பறிகொடுத்து தவித்துக் கொண்டிருக்கும் நிலைமையை பார்த்தால் கல் மனது கொண்டவர்கள் கூட கரைந்து போவது போல இருக்கிறது. ஆனால் இன்னும் பாக்கியாவை குற்றம் சொல்லிக் கொண்டே கோபி இருக்கிறார்.