தமிழகம் முழுவதும் டிஜிட்டல் மயமாகும் ஊராட்சிகள் – மத்திய அரசு அதிரடி!

0
தமிழகம் முழுவதும் டிஜிட்டல் மயமாகும் ஊராட்சிகள் - மத்திய அரசு அதிரடி!
தமிழகம் முழுவதும் டிஜிட்டல் மயமாகும் ஊராட்சிகள் - மத்திய அரசு அதிரடி!
தமிழகம் முழுவதும் டிஜிட்டல் மயமாகும் ஊராட்சிகள் – மத்திய அரசு அதிரடி!

தமிழகம் முழுவதும் உள்ள அனைத்து ஊராட்சி ஒன்றியங்களும் டிஜிட்டல் மயமாக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் காகித பயன்பாட்டை குறைக்கும் பொருட்டு இந்த முயற்சி மேற்கொண்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

ஊராட்சி ஒன்றியங்கள்:

இந்தியா வளரும் நாடுகள் பட்டியலில் உள்ளது. இந்தியாவை வளர்ந்த நாடுகளின் பட்டியலுக்கு கொண்டு செல்ல நம் மத்திய அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அந்த வகையில் இந்தியா முழுவதும் டிஜிட்டல் மயமாக்கப்பட்டு வருகிறது. நாட்டில் அனைத்தும் கணினி மயமாக்கப்பட்டு விட்டது. அதற்கேற்றவாறு தொழில்நுட்பங்களும் மிக வேகமாக வளர்ச்சி அடைந்து வருகின்றன. இந்த நிலையில் தமிழகம் முழுவதும் உள்ள ஊராட்சி ஒன்றியங்கள் டிஜிட்டல் மயமாக்கப்படுவதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.

Exams Daily Mobile App Download

ஒன்றிய அரசின் டிஜிட்டல் இந்தியா திட்டத்தின் கீழ் அரசின் அனைத்து நடவடிக்கைகளும் டிஜிட்டல் மயமாக்கப்படும் பணிகள் தீவிரமாகியுள்ளன. இந்தியாவில் சுற்றுச்சூழலை மேம்படுத்தும் நோக்கில் காகிதமில்லா நாட்டினை உருவாக்க மத்திய அரசு முயற்சித்து வருகிறது. அதன்படி ஒன்றிய அரசு மற்றும் மாநில அரசுகளின் அலுவலகங்கள் அனைத்தும் இ – ஆபீஸ் ஆக மாறுகின்றன. இதனை தொடர்ந்து தமிழகத்தில் உள்ள ஊராட்சி மற்றும் உள்ளாட்சி துறைகள் அனைத்தும் இ – ஆபீஸ் ஆக மாறுகின்றன. இதற்காக தமிழகத்தில் உள்ள 385 ஊராட்சி அலுவலகங்களை இ – ஆபீஸ் ஆக மாற்றும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.

இந்தியாவில் iphone உட்பட அனைத்து ஸ்மார்ட்போன்களுக்கும் USB Type-C சார்ஜர்? முக்கிய தகவல் வெளியீடு

இதன் மூலம் ஊராட்சி ஒன்றியங்கள் மூலம் பராமரிக்கப்பட்டு வரும் அனைத்து பதிவேடுகளும் இனி கணினி மூலம் பதிவேடு செய்யப்படும். மேலும் மக்கள் பிரதிநிதிகள் வழங்கும் மனுக்கள், ஆவணங்கள் அனைத்தும் கணினி மூலமே பராமரிக்கப்படும். அதற்கான பதில்களும் கணினி மூலமே தெரிவிக்கப்படும். இதன் மூலம் ஊராட்சி ஒன்றியங்களில் காகித பயன்பாடு 90% குறைக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த இ-ஆபீஸ் நடைமுறைகான பயிற்சி மாநிலத்தில் உள்ள 770 பிடிஓக்கள்,1500 மேற்பட்ட துணை பிடிஓக்கள், அலுவலக கண்காணிப்பாளர்கள், காசாளர்கள், கணக்காளர்கள், அலுவலக உதவியாளர்கள், கணினி ஆபரேட்டர்கள் என அலுவலக நிர்வாகத்தில் உள்ள அனைவருக்கும் பயிற்சி அளிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்த நிலையில் வேலூர் மாவட்டத்தில் உள்ள 7 ஊராட்சி ஒன்றிய அலுவலர்களுக்கு இதுகுறித்த பயிற்சி அளிக்கப்பட்டது.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!