SBI வங்கி வாடிக்கையாளர்கள் கவனத்திற்கு – செப்டம்பர் 30 க்குள் பான் & ஆதார் இணைப்பு!
நாட்டின் முன்னணி பொதுத்துறை வங்கியான ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா (SBI) வாடிக்கையாளர்கள் வரும் செப்டம்பர் 30ம் தேதிக்குள் பான்-ஆதார் இணைப்பு சேவைகளை பெற்றிருக்க வேண்டும் என நினைப்பூட்டியுள்ளது.
பான்-ஆதார் இணைப்பு
SBI வங்கி, தனது வாடிக்கையாளர்கள் தடையில்லா இணைய வங்கி சேவைகளை பெற்றுக் கொள்வதற்கு ஏதுவாக பான் எண்ணை ஆதார் எண்ணுடன் இணைத்திருக்க வேண்டும் என அறிவுறுத்தியுள்ளது. அவ்வாறு செய்ய தவறினால் பயனர்கள் தடையற்ற வங்கி சேவையை அனுபவிப்பதில் சிரமம் ஏற்படும் என்றும் கூறியுள்ளது. இந்தியாவின் மிகப்பெரிய கடன் வழங்குனரான ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா வங்கி (SBI) பல லட்சக்கணக்கான வாடிக்கையாளர்களை கொண்டு செயல்பட்டு வரும் ஒரு முன்னணி வங்கி நிறுவனமாகும்.
ஹோட்டல்கள் திறக்கும் நேரம் இரவு 10 மணிவரை நீட்டிப்பு – புனே நிர்வாகம் உத்தரவு!
இவ்வங்கியில் கணக்கு வைத்திருப்பவர்கள் தங்கள் பான்-ஆதார் இணைப்புகளை பெற்றிருக்க வேண்டும் என வலியுறுத்திய நிர்வாகம் செப்டம்பர் 30 வரை காலக்கெடு கொடுத்துள்ளது. ஒருவேளை இந்த காலத்துக்குள் ஆதார்-பான் எண்ணை இணைக்க தவறினால் வங்கி வசதியில் சிக்கலை சந்திக்க நேரிடும் என தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளது. அதாவது, ‘எந்தவொரு சிரமத்தை தவிர்க்கவும், தடையற்ற வங்கி சேவையை தொடர்ந்து அனுபவிக்கவும் ஆதார் எண்ணுடன் பான் எண்ணை இணைக்குமாறு நாங்கள் எங்கள் வாடிக்கையாளர்களுக்கு அறிவுறுத்துகிறோம்’ என கூறியுள்ளது.
TN Job “FB Group” Join Now
மேலும் வருமான வரி சட்டம், 1961 ன் பிரிவு 139AA இன் படி, PAN ஒதுக்கப்பட்ட மற்றும் ஆதார் எண்ணை பெரற தகுதியுள்ள ஒவ்வொரு நபரும், தங்கள் ஆதார் எண்ணை பான் எண்ணுடன் இணைத்து வருமான வரி அதிகாரிகளுக்கு தெரிவிக்க வேண்டும். பான் எண்ணுடன் ஆதார் இணைப்பதற்கான காலக்கெடு செப்டம்பர் 30 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. தவிர ஆதார் அட்டையுடன் பான் எண்ணை இணைக்க தவறும் எந்தவொரு நபரது பான் எண்ணும், இந்த சேவைகளை பெற்றுக் கொள்ளும் வரை செயலற்றதாகி விடும் என குறிப்பிட்டுள்ளது.