ஹோட்டல்கள் திறக்கும் நேரம் இரவு 10 மணிவரை நீட்டிப்பு – புனே நிர்வாகம் உத்தரவு!
புனே நகரத்தில் உள்ள கடைகள் ஆகஸ்ட் 9 முதல் இரவு 8 மணி வரையும், உணவகங்கள் இரவு 10 மணி வரையும் திறந்திருக்க மகாராஷ்டிரா மாநில துணை முதல்வர் அஜித் பவார் நேற்று உத்தரவிட்டுள்ளார்.
புதிய தளர்வுகள்:
மகராஷ்டிரா மாநிலத்தில் கொரோனா தொற்றின் 2ம் அலை மிக அதிக அளவில் பாதிப்புகளை ஏற்ப்டுத்தியுள்ளது. தற்போது பாதிப்பு நிலவரத்துக்கு ஏற்றவாறு மாவட்டங்களில் கட்டுப்பாடுகளை கூட்டவும், தளர்வுகளை அறிவிக்கவும் அரசு முடிவு செய்துள்ளது. இதனால், புனே உள்ளிட்ட 25 மாவட்டங்களில் லெவல் -3 கட்டுப்பாடுகள் தொடர்ந்து நடைமுறையில் இருந்து வரும் நிலையில், அங்கு இரவு 8 மணி வரை கடைகள் திறக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. முன்னதாக உணவக உரிமையாளர்கள், வணிகர்கள் மற்றும் வணிகர் சங்கங்கள் தங்கள் நிறுவனங்களின் செயல்படும் நேரத்தை நீட்டிக்க அரசிடம் கோரிக்கை வைத்துள்ளனர்.
முதல்வருக்கு எதிராக வழக்கு தொடர்ந்தால் 5 வருடம் பொதுநல வழக்குகள் தொடர தடை!
இதனால், புனே நகரத்தில் உள்ள கடைகள் ஆகஸ்ட் 9ம் தேதியான இன்று முதல் இரவு 8 மணி வரையும், உணவகங்கள் 50% நபர்களுடன் இரவு 10 மணி வரை திறக்கவும் மகாராஷ்டிரா துணை முதல்வர் அஜித் பவார் அனுமதி அளித்துள்ளார். புனே மற்றும் அண்டை நகரான பிம்ப்ரி சிஞ்ச்வாட் டவுன்ஷிப்பில் இரவு 8 மணி வரை வணிக வளாகங்கள் செயல்பட அனுமதிக்கப்படுகிறது. ஆனால் கோவிட் -19 தடுப்பூசிகளின் இரண்டு டோஸ் பெற்றவர்கள் மட்டுமே அனுமதிக்கப்படுவார்கள்.
TN Job “FB Group” Join Now
மேலும், மால் ஊழியர்கள் இரண்டு டோஸ் டோஸ் தடுப்பூசிகளையும் செலுத்தியிருக்க வேண்டும். ஊழியர்களுக்கு 15 நாட்களுக்கு ஒரு முறை தொடர்ந்து சோதனை செய்ய வேண்டும். மால்கள் இரவு 8 மணி வரை திறந்திருக்கும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. புனே மற்றும் பிம்ப்ரி சிஞ்ச்வாட் நகரப் பகுதிகளில் உள்ள அனைத்து வணிக நிறுவனங்களையும் மற்றும் சந்தைகளையும் வாரத்திற்கு ஒரு முறை மூட வேண்டும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. பூங்காக்கள் காலை மற்றும் மாலை நேரங்களில் திறந்திருக்க அனுமதிக்கப்படும்.