முதல்வருக்கு எதிராக வழக்கு தொடர்ந்தால் 5 வருடம் பொதுநல வழக்குகள் தொடர தடை!
தமிழக முதல்வர் முக ஸ்டாலின் மீது தொடுக்கப்பட்ட வழக்கினை விசாரித்த நீதிபதி முதலமைச்சருக்கு எதிராக வழக்கு தொடர்ந்தவர் அடுத்த 5 ஆண்டு காலம் பொதுநல வழக்குகள் தொடர தடை விதித்து தீர்ப்பு வழங்கியுள்ளார்.
5 ஆண்டுகளுக்கு தடை:
தமிழக முதல்வர் ஸ்டாலின் மீது சென்னை உயர் நீதிமன்றத்தில் ஸ்ரீதரன் என்பவரால் வழக்கு தொடரப்பட்டது. அந்த வழக்கில் இந்து சமய அறநிலையத் துறையின் ஆலோசனைக் கூட்டங்களுக்கு முதல்வர் தலைமை வகிக்க தடை விதிக்க வேண்டும் என்றும், இந்து மதத்தை பின்பற்றுவதாக இந்து கடவுள் முன் உறுதிமொழி எடுத்த பிறகே இக்கூட்டங்களுக்கு தலைமை வகிக்க முதல்வருக்கு உத்தரவிட வேண்டும் எனவும் கூறப்பட்டிருந்தது. இந்த வழக்கு நீதிபதி சஞ்சீப் பானர்ஜி, நீதிபதி ஆதிகேசவலு ஆகியோர் தலைமையில் விசாரணை மேற்கொள்ளப்பட்டது.
2100க்குள் உலக வெப்பநிலை 2 டிகிரி செல்சியஸை விட அதிகரிக்கும் – எச்சரிக்கும் IPCC அறிக்கை!
அதன் அடிப்படையில் இந்த வழக்கில் பொதுநலன் ஏதும் இல்லை எனவும், உள்நோக்கத்துடன் இந்த வழக்கு தொடரப்பட்டுள்ளது எனவும் கூறப்பட்டுள்ளது. இவ்வாறு தனிப்பட்ட காரணங்களுக்காகவும் உள்நோக்கத்துடன் தொடரப்படும் வழக்குகளையும் அனுமதிக்க முடியாது என கூறப்பட்டது. மதசார்பற்ற நாடாக இருக்கும் இந்தியாவில் அனைத்து மதத்தினரும் சமமானவர். மேலும் ஒரு மதத்தினர் மற்றவர்களை மதித்து நடப்பது முக்கியம் எனவும் கூறப்பட்டுள்ளது.
TN Job “FB Group” Join Now
ஆட்சி அமைக்கும் முன்பும், பதவி ஏற்கும் முன்பும் கடவுள் வாயிலாகவோ, அரசியலமைப்பு வாயிலாகவோ உறுதிமொழி எடுக்கிறார்கள். மனுதாரரின் மத உணர்வு ஏற்கத்தக்கதல்ல என கூறி மனுதாரர் 5 ஆண்டுகளுக்கு எந்த நீதிமன்றத்திலும் அந்த நீதிமன்றத்தின் உத்தரவை பெறாமல் பொதுநல வழக்குகளை தொடரக்கூடாது என்று உத்தரவிடப்பட்டது.