உங்கள் கணக்கில் இன்னும் நாமினியை இணைக்கவில்லையா? – ஜூன் 30ம் வரை அவகாசம் நீட்டிப்பு!

0
உங்கள் கணக்கில் இன்னும் நாமினியை இணைக்கவில்லையா? - ஜூன் 30ம் வரை அவகாசம் நீட்டிப்பு!
உங்கள் கணக்கில் இன்னும் நாமினியை இணைக்கவில்லையா? – ஜூன் 30ம் வரை அவகாசம் நீட்டிப்பு!

மியூச்சுவல் ஃபண்டு கணக்கு வைத்திருக்கும் நபர்களில் நாமினேசன் இணைக்காதவர்களுக்கு புதிய உத்தரவு ஒன்று வெளியிடப்பட்டுள்ளது.

நாமினி இணைப்பு;:

நாட்டில் மியூச்சுவல் ஃபண்டு, டிமேட் கணக்குகள் மற்றும் இந்திய பங்கு பரிவர்த்தனை வாரியத்தின் கணக்குகளை வைத்திருக்கும் முதலீட்டாளர்களுக்கு மத்திய அரசு நாமினிகளை இணைப்பதை கட்டாயமாக்கி உள்ளது.நாமினிகளை இணைக்காத பட்சத்தில் கணக்குகள் முடக்கப்படும் என்றும் தெரிவிக்கப்படுகிறது. இதற்கு முன்னதாக செப்டம்பர் 30, 2023 ஆம் தேதி வரை அவகாசம் அளிக்கப்பட்டிருந்தது. ஆனால் முதலீட்டாளர்கள் பலரும் இந்த கால இடைவெளிக்குள் நாமினியை இணைக்காத நிலையில் கால அவகாசத்தை நீட்டிகுமாறு கோரிக்கைகள் வைத்திருந்தனர்.

இதனால் முன்னதாக டிசம்பர் 31ம் தேதி வரை நாமினிகளை இணைப்பதற்கு அவகாசம் அளிக்கப்பட்டிருந்தது. தற்போது வெளியான அறிக்கையின் படி பான் கணக்கு வைத்திருக்கும் நபர்களில் 25 லட்சத்திற்கும் மேற்பட்ட முதலீட்டாளர்கள் நாமினியை பதிவு செய்யவில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக தற்போது ஜூன் 30, 2024ஆம் தேதி வரை நாமினிகளை இணைப்பதற்கான கால அவகாசம் மேலும் நீட்டிக்கப்பட்டுள்ளது. எனவே தற்போது வரை நாமினிகளை இணைக்காத முதலீட்டாளர்கள் இந்த வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ளுமாறு அறிவுறுத்தப்படுகிறது.

Follow our Twitter Page for More Latest News Updates

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!