தமிழக தொழிலாளர்களுக்கு பனை ஏறும் கருவிகள் – அமைச்சர் தகவல்!
வேளாண்மைத் துறைக்கென முதன்முதலில் தனி பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது. அதில் தமிழகத்தில் சட்டப்பேரவையில் வேளாண்துறை அமைச்சர் பனை ஏறும் கருவிகள் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக கோரியுள்ளார்.
வேளாண்மைத் துறை:
தமிழகத்தில் சட்டமன்ற தேர்தலில் திமுக ஆட்சி பொறுப்பேற்று முதல் முறையாக 2021-22 ஆம் ஆண்டுக்கான பட்ஜெட் ஆகஸ்ட் 13ம் தேதி தாக்கல் செய்யப்பட்டது. தமிழக சட்டப்பேரவை வரலாற்றில் முதல் முறையாக காகிதமில்லா இ-பட்ஜெட்டை நிதியமைச்சர் பி.டி.ஆர் பழனிவேல் தியாகராஜன் அவர்கள் தாக்கல் செய்து உரையாற்றினார். மறுநாள் வேளாண்மைத் துறைக்கென முதன்முதலில் தனி பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது.
அரசு சார்பில் ரூ.2 லட்சம் வரை கல்வி உதவித்தொகை – மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு!
இதனை தொடர்ந்து சட்டப்பேரவையில் வேளாண்துறை அமைச்சர் பனை ஏறும் கருவிகள் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக கூறினார். பனை தொழிலாளர்களுக்கு மானிய விலையில் பனை ஏறும் கருவிகள் வழங்குமாறு தொடர் கோரிக்கை விடுக்கப்பட்டு வரும் நிலையில், பனை ஏறும் கருவிகள் வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருவதாக அவர் கூறினார். அதனை தொடர்ந்து போதையில்லா பதநீர் விற்பனை செய்ய வேண்டும் என்று பாமக தலைவரும், சட்டமன்ற உறுப்பினருமான ஜி.கே.மணி கோரிக்கையை முன்வைத்தனர்.
TN Job “FB Group” Join Now
மேலும் தென்னை மரத்தில் தொழில்நுட்பத்துடன் நீர் பானம் இறக்க வேண்டும் எனக் கூறிய அவர் நீர் பானத்தை பாட்டிலில் அடைத்து அனைத்து இடங்களிலும் விற்பனை செய்யவேண்டும் என்றும் கூறினார். மேலும் அதை வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யலாம் என்று யோசனை தெரிவித்தார். அதற்கு பனை ஏறும் கருவிகள் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் நீர் பானம் தயார் செய்ய முன் வருபவர்களுக்கு உதவ தமிழ்நாடு அரசு தயாராக இருப்பதாகவும் வேளாண்துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் பதிலளித்துள்ளார்.