5 ஆண்டுகளில் 20 லட்சம் வேலைவாய்ப்புகள் உருவாக்கம் – மாநில அரசு திட்டம்!
கேரளா அரசின் மூத்த அதிகாரி ஒருவர், 20 லட்சம் தரமான வேலைவாய்ப்புகள் மாநிலத்தில் அடுத்த 5 ஆண்டுகளில் உறுதிவாக்குவதை இலக்காக நிர்ணயிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.
கேரளா அரசின் திட்டம்:
கேரளா மாநிலத்தில் புதிய ஆட்சி பொறுப்பேற்றத்துக்கு பின் முதல் அமைச்சரவைக் கூட்டம் நடந்தது. அந்த கூட்டத்தில் சமூகத்தின் விழிப்புணர்வை மேம்படுத்துவதற்காக ஒரு திட்டம் செயல்படுத்த இருப்பதாக முதலமைச்சர் பினராயி விஜயனின் முதன்மைச் செயலாளர் டாக்டர் கே எம் ஆபிரகாம் அறிவித்துள்ளார். இதன் பிறகு செய்தியாளர்களிடம் அவர் பேட்டியளித்துள்ளார். அதில், உயர்கல்வி நிறுவனங்களில் மாணவர்களுக்கு தேவையான திறன்கள், மாறி வரும் காலத்திற்கு தகுந்த அணுகுமுறை போன்றவற்றை வழங்குவதை உறுதி செய்யும் விதமாக பொருளாதார மிஷன் உருவாக்கப்பட்டுள்ளது.
தமிழக தொழிலாளர்களுக்கு பனை ஏறும் கருவிகள் – அமைச்சர் தகவல்!
அடுத்த ஐந்து ஆண்டுகளில் இந்த திட்டத்திற்காக ரூ.6,000 செலவிட உள்ளதாகவும், இந்த திட்டத்தில் மூலம் வெளிநாட்டில் வேலை இழந்தவர்கள், படிப்பை முடித்தவர்கள், வேலைவாய்ப்பு கிடைக்காதவர்கள், மற்றும் படிப்பை பாதியில் நிறுத்தியவர்கள் ஆகியோர் பலனடைய உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தனியார் துறையில் வேலை வாய்ப்பை பெற்று தரும் Monster.com மற்றும் Freelancer.com ஆகிய தளங்கள் சர்வதேச அளவில் செயல்பட்டு வருகிறது என்று ஆபிரகாம் கூறினார்.
TN Job “FB Group” Join Now
இந்த திட்டத்தின் முதல் கட்டமாக கேரளாவில் முன்னணி ஊடகங்களின் ஆலோசனை கூட்டம் நேற்று ஆன்லைன் மூலம் நடத்தப்பட்டது. ஊடகங்களுடனான கலந்துரையாடல்களுக்குப் பிறகு வணிகம், கல்வி, தொழிலாள வர்க்கம், பெண்கள் அமைப்புகள் மற்றும் மாணவர்-இளைஞர் குழுக்கள் போன்ற பல்வேறு துறைகளின் பிரதிநிதிகளுடன் ஆலோசனை நடத்தப்படும்.தொழிலாள வர்க்கம், பெண்கள் அமைப்புகள் மற்றும் மாணவர்-இளைஞர் குழுக்கள் போன்ற பல்வேறு துறைகளின் பிரதிநிதிகளுடன் ஆலோசனை நடத்தப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.