ராதிகா வீட்டில் மீண்டும் பிரச்சனை செய்யும் ஈஸ்வரி, கோவத்தில் ராதிகா – பாக்கியலட்சுமி புதிய ட்விஸ்ட்!
பாக்கியலட்சுமி சீரியலில் கடந்த சில வாரங்களாக அதிரடியாக பல திருப்பங்கள் நடந்து வரும் நிலையில், வரும் வாரத்திலும் மேலும் சுவாரஸ்யமான காட்சிகள் வர உள்ளது. இது குறித்த ப்ரோமோ காட்சிகள் வெளியாகியுள்ளது.
பாக்கியலட்சுமி சீரியல்
விஜய் டிவியின் டிஆர்பி ரேட்டிங்கில் கடந்த சில மாதங்களாக முக்கிய இடத்தை பிடித்து வரும் பாக்கியலட்சுமி சீரியலில் அடுத்தடுத்து பல திருப்பங்கள் நடந்து வருகிறது.கோபியை பற்றி முழு உண்மைகளையும் தெரிந்து கொண்ட பாக்கியா என்ன முடிவெடுப்பார் என்பதே அனைவரின் கேள்வியாகவும் இருந்தது. விவாகரத்து வேண்டும் என்பதில் பாக்கியா உறுதியாக இருந்தது அனைவருக்கும் ஆச்சர்யத்தை அளித்தது. அதே போல், பாக்கியா தான் வீட்டை விட்டு வெளியேறப்போகிறார் என்று எதிர்பார்த்த நிலையில், கோபியை அனுப்பி விட்டார்.
இதனால் ஈஸ்வரிக்கு பாக்கியா மீது பயங்கர கோவம், ஆனாலும் பாக்கியா தனது முடிவை மாற்றிக் கொள்ளவில்லை. வீட்டை விட்டு சென்ற கோபி நேராக ராதிகாவிடம் சென்று விஷயத்தை கூறி விட்டு, வெளியே சென்று விட்டார். கோபி வீட்டில் இல்லாமல் இருப்பதால், கோபி வரும் வரை பாக்கியாவுடன் பேச மாட்டேன் என்று ஈஸ்வரி சொல்லி விட்டார். இந்நிலையில், கோபியை தேடி ராதிகா வீட்டிற்கு ஈஸ்வரி செல்கிறார். அங்கு அவர்களின் அனுமதி இல்லாமலேயே அனைத்து இடங்களிலும் கோபியை தேடுகிறார்.
தமிழகத்தில் விநாயகர் சதுர்த்தி விழாவிற்கான புதிய வழிமுறைகள் – முக்கிய தகவல்!
Exams Daily Mobile App Download
அப்போது வீட்டில் ராதிகா, அவரது அம்மா மற்றும் அண்ணன் ஆகியவர்கள் இருக்கின்றனர். அவர்கள் எவ்வளவோ சொல்லியும் ஈஸ்வரி கேட்பதாக இல்லை. ராதிகா அம்மாவிடம் எங்கள் குடும்பத்தை கெடுத்து விட்டு, உங்கள் மகள் மட்டும் நல்லா வாழ்ந்துருவான்னு பாத்தீங்களா? என்று கேட்டு தொடர்ந்து சாபம் கொடுக்க தொடங்குகிறார். இதனால் கோபமடைந்த ராதிகா, இதுக்கு மேல நீங்க எதுவும் பேச கூடாது, வீட்டை விட்டு வெளியே போங்க என்று திட்டுகிறார்.
To Subscribe => Youtube Channel கிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebook கிளக் செய்யவும்
To Join => Telegram Channel கிளிக் செய்யவும்