தமிழகத்தில் விநாயகர் சதுர்த்தி விழாவிற்கான புதிய வழிமுறைகள் – முக்கிய தகவல்!

0
தமிழகத்தில் விநாயகர் சதுர்த்தி விழாவிற்கான புதிய வழிமுறைகள் - முக்கிய தகவல்!
தமிழகத்தில் விநாயகர் சதுர்த்தி விழாவிற்கான புதிய வழிமுறைகள் - முக்கிய தகவல்!
தமிழகத்தில் விநாயகர் சதுர்த்தி விழாவிற்கான புதிய வழிமுறைகள் – முக்கிய தகவல்!

தமிழகத்தில் வருகிற ஆகஸ்ட் 31ம் தேதி அன்று விநாயகர் சதுர்த்தி விழாவானது கோலாகலமாக கொண்டாடப்பட உள்ளது. இவ்விழாவை முன்னிட்டு நீர்நிலைகளில் விநாயகர் சிலைகளை கரைப்பதற்கான வழிமுறைகளை மாசு கட்டுப்பாடு வாரியம் வெளியிட்டுள்ளது.

விநாயகர் சதுர்த்தி

தமிழகத்தில் ஆண்டுதோறும் ஆவணி மாதத்தின் வளர்பிறைச் சதுர்த்தி நாள் அன்று விநாயகர் சதுர்த்தி விழாவானது கொண்டாடப்படுவது வழக்கமாகும். அந்த வகையில் இந்த ஆண்டு வருகிற ஆகஸ்ட் 31ம் தேதி அன்று தமிழகம் முழுவதும் விநாயகர் சதுர்த்தி விழாவானது பிரமாண்டமாக கொண்டாடப்பட உள்ளது. விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு ஊரெங்கும் பந்தல்கள் அமைக்கப்பட்டு மண்ணால் செய்யப்பட்ட விநாயகர் சிலைகளை வைத்து பூஜைகள் செய்யப்படும். அதன் பின்னர் விநாயகர் சிலையை 3வது நாள், 5வது நாளில் ஊரின் அருகில் உள்ள நீர்நிலைகளில் கரைக்கப்படுகிறது.

இந்த நிலையில் விநாயகர் சிலைகளை நீர்நிலைகளில் கரைப்பதற்கான வழிமுறைகளை மாசு கட்டுப்பாட்டு வாரியம் அறிக்கை வெளியிட்டுள்ளது. இதில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, விநாயகர் சிலைகள் களிமண்ணால் செய்யப்பட்டால் மட்டுமே கரைக்க அனுமதிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன் சிலைகளில் உலர்ந்த மலர் கூறுகள், வைக்கோல் உள்ளிட்டவைகளை ஆபரணமாக அலங்கரிக்க பயன்படுத்தலாம். மேலும் சிலைகள் பளபளப்பாக இருக்க மரங்களின் இயற்கை பிசின்களை பயன்படுத்தி கொள்ளலாம். இதையடுத்து நீர்நிலைகளை மாசுபடுத்தும் ஒருமுறை பயன்படுத்தும் பிளாஸ்டிக் மற்றும் தெர்மாகோல் பொருட்களை பயன்படுத்த தடை என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

TN TRB தேர்வெழுத உள்ளோர்களுக்கு முக்கிய அறிவிப்பு – தேர்வாணையம் வெளியிட்ட தகவல்!

Exams Daily Mobile App Download

இதனை தொடர்ந்து சிலைகளில் வண்ணம் பூச நச்சு மற்றும் மக்காத ரசாயன சாயத்தை பயன்படுத்தக்கூடாது. இதற்கு மாற்றாக சுற்றுச்சூழலுக்கு உகந்த நீர் சார்ந்த, மக்கக் கூடிய, நச்சுக் கலப்பற்ற இயற்கை சாயங்களை மட்டுமே பயன்படுத்த வேண்டும் என்று மாசு கட்டுப்பாட்டு வாரியம் அறிவித்துள்ளது. மேலும் விநாயகர் சிலைகளை மாவட்டத்தில் அனுமதிக்கப்பட்டுள்ள இடங்களில் மாசு கட்டுப்பாடு வாரியம் அறிவித்துள்ள விதிமுறைகளின் அடிப்படையில் கரைக்க வேண்டும். இது தொடர்பான மேலும் கூடுதலான தகவல்களை பெற மாவட்ட ஆட்சியர், எஸ்.பி., மாவட்ட சுற்றுச்சூழல் பொறியாளர் உள்ளிட்டவர்களை அணுகி கேட்டறிந்து கொள்ளலாம்.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!