கோபியை விட்டு விலகும் பாக்கியா, அதிர்ச்சியில் குடும்பத்தினர்! ப்ரோமோ ரிலீஸ்!
பாக்கியாவிற்கு கோபியை பற்றிய அனைத்து உண்மைகளும் தெரிய வந்தவுடன் என்னை பிடிக்காமல் தானே இன்னொரு பெண்ணை தேடி சென்றீர்கள், தற்போது நானே செல்கிறேன் என பாக்கியா வீட்டை விட்டு செல்லும்படியான ப்ரோமோ வெளியாகியுள்ளது.
பாக்கியலட்சுமி:
விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி கொண்டிட்ருக்கும் பாக்கியலட்சுமி தொடரில் கோபியை பற்றிய அனைத்து உண்மைகளும் பாக்கியாவிற்கு தெரிந்துவிட்டது. இதற்கு பிறகு பாக்கியா என்ன முடிவெடுக்கப் போகிறார். அதாவது, உண்மையை மறைத்து கோபி கூடவே வாழ போகிறாரா அல்லது கோபியை விட்டு விலகி குடும்பத்தை பாக்கியா கவனித்துக்கொள்ள போகிறாரா என சீரியல் விறுவிறுப்பாக சென்று கொண்டிருக்கிறது. அதாவது, ராதிகாவை தான் கோபி காதலிக்கிறார் என்கிற உண்மை பாக்கியாவிற்கு தெரிய வந்ததும் பாக்கியா நொறுங்கி போய் விடுகிறார்.
Exams Daily Mobile App Download
ஆனாலும், கோபியின் வாயால் உண்மை அனைத்தும் வெளியே வர வேண்டும் என பாக்கியா அமைதியாக இருக்கிறார். கோபி மருத்துவமனையில் இருந்து வீட்டிற்கு வரும் போது கோபியை சரமாரியாக கேள்வி கேட்கிறார். ஒரு வேளை பாக்கியா மருத்துவமனையில் நடந்த விஷயத்தை பார்த்திருப்பாரோ என பயப்படுகிறார். பின்னர், உங்கள் மனைவி தான் உங்களுக்கு பில் கட்டியதாக கூறினார்கள். நான் கட்டவில்லையென்றால் வேறு யார் கட்டினார்கள் என பாக்கியா கேட்கிறார். என்ன பதில் சொல்வதென்று தெரியாமல் கோபி நடுங்குகிறார்.
இதன் பின்பு, கோபி ராதிகாவை காதலிக்கின்ற விஷயம் மற்றும் மருத்துவமனையில் பாக்கியா பார்த்த அனைத்து விஷயத்தையும் குடும்பத்தினர்களிடம் பாக்கியா கூறுகிறார். இதன் பின்பு, குடும்பத்தினர்கள் அனைவருமே வாயடைத்து போகின்றனர். பின்னர், கோபிக்கு ராதிகா தானே முக்கியம். நான் எதற்காக இந்த வீட்டில் இருக்க வேண்டும். உங்க கூட இனி ஒரு நொடி கூட வாழ முடியாது என கூறி பாக்கியா வீட்டை விட்டு செல்லும்படியான ப்ரோமோ வெளியாகியுள்ளது.