தடுப்பூசி செலுத்தாதவர்கள் மொபைல் எண் முடக்கம் – பாகிஸ்தான் அரசு அறிவிப்பு!
கொரோனா பரவல் காரணமாக தடுப்பூசி கட்டாயம் செலுத்தி கொள்ள வேண்டும் என பாகிஸ்தான் அரசு அறிவித்துள்ளதை தொடர்ந்து அவ்வாறு தடுப்பூசி போடாதவர்கள் மொபைல்போன் எண்கள் முடக்கப்படும் என சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
கொரோனா தடுப்பூசி:
பாகிஸ்தானில் கொரோனா நோய்த்தொற்று வேகமாக பரவி வருகிறது. இதுவரை கொரோனாவால் 8 லட்சத்துக்கும் அதிகமானவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால் ஊரடங்கு கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்பட்டுள்ளன. பல்வேறு நாடுகளில் கொரோனா பாதிப்பு இரண்டாம், மூன்றாம் அலையை எட்டியுள்ளது. இதனை தடுக்க கொரோனா தடுப்பூசி செலுத்துவதை அரசுகள் தீவிரப்படுத்தியுள்ளன.
IDBI வங்கி பயனர்களுக்கு முக்கிய அறிவிப்பு – ATM, டெபாசிட், காசோலை கட்டண மாற்றம்!
அந்த வரிசையில் பாகிஸ்தான் அரசு கொரோனா தடுப்பூசி போடும் பணியை தீவிரமாக செயல்படுத்தி வருகிறது, ஆனால், தடுப்பூசிகள் குறித்து பரவிய வதந்திகளை நம்பிய ஒருசிலர் தடுப்பூசியை போட்டுக்கொள்ள தயங்குகின்றனர். இதுவரை பாகிஸ்தானில் பிப்ரவரி மாதம் முதல் தடுப்பூசி போடப்பட்டு வரும் நிலையில் முதல் டோஸை போட்டுக்கொண்ட சுமார் 3 லட்சம் பேர் இரண்டாம் டோஸை போட்டுக்கொள்ளவில்லை.
TN Job “FB Group” Join Now
இதனால் பாகிஸ்தான் சுகாதாரத்துறை முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதன்படி கொரோனா தடுப்பூசி செலுத்தி கொள்ளாதவர்கள் மொபைல் எண்கள் முடக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதே போல கொரோனா தடுப்பூசி செலுத்தாத அரசு அலுவலர்களுக்கு சம்பளம் வழங்க கூடாது என பாகிஸ்தானின் சிந்து மாகாண முதல்வர் முராத் அலி ஷா உத்தரவிட்டுள்ளது குறிப்பிடத்தக்கதாகும்.