சுகாதார பணியாளர்களுக்கு ஊதியத்துடன் கூடிய மகப்பேறு விடுப்பு – அமைச்சர் அறிவிப்பு!
மாநிலத்தில் உள்ள அனைத்து ஆரம்ப சுகாதார சேவைகளை வழங்கி வரும் ஆஷா மற்றும் துணை செவிலியர்களுக்கு ஊதியத்துடன் கூடிய மகப்பேறு விடுமுறை வழங்கப்பட இருப்பதாக அமைச்சர் டி ஹரிஷ் ரா தெரிவித்திருக்கிறார்.
மகப்பேறு விடுப்பு
பல்வேறு மாநிலங்களில் உள்ள அரசு மற்றும் தனியார் ஊழியர்களுக்கு மகப்பேறு விடுப்புடன் கூடிய சம்பளமும் வழங்கப்பட்டு வருகிறது. இதனிடையே, நேற்று தெலுங்கானா மாநிலத்தில் ஆஷா மற்றும் துணை செவிலியர் குறித்த ஆய்வுக்கூட்டம் மாநில சுகாதார அமைச்சர் டி ஹரிஷ் ரா தலைமையில் நடைபெற்றது. இந்த ஆய்வு கூட்டத்தில் ஆரம்ப சுகாதார சேவைகளின் முதுகெலும்பாக விளங்கி வரும் சுகாதாரப் பணியாளர்களுக்கு ஊதியத்துடன் கூடிய மகப்பேறு விடுப்பு அறிவிக்கப்பட்டிருக்கிறது.
அப்டேட் ஆகும் தமிழகம் ..100 இடங்களில் இ – வாகன சார்ஜிங் பாயிண்ட் – மின்வாரியத்தின் அதிரடி!
மேலும், பல்வேறு மாநிலங்களில் ஆஷாக்களின் மாத சம்பளம் ரூ.4,000 முதல் 5,000 வரை மட்டுமே வழங்கப்பட்டு வரும் நிலையில் தெலுங்கானாவில் ஆஷாக்களின் மாதச் சம்பளம் ரூ.9,750 பெற்றுவருவதாகவும் தெரிவிக்கப்பட்டிருக்கிறது. மேலும், மருத்துவமனைகளில் செவிலியர்கள் அனைத்து மக்களுக்கும் தரமான சிகிச்சையை வழங்கி வருவதாகவும் அமைச்சர் டி ஹரிஷ் ரா அறிவித்திருக்கிறார்.