மதுரையின் ‘மண்ணின் மைந்தன்’ ஓவியர் ‘பத்மஸ்ரீ’ மனோகர் தேவதாஸ் மறைவு – முதல்வர் இரங்கல்!
மதுரையை பூர்வீகமாக கொண்டு வாழ்ந்து வந்த ஓவியரும், பிரபல எழுதாளருமான ‘பத்மஸ்ரீ’ மனோகர் தேவதாஸ் அவர்கள் மறைவு குறித்து முதல்வர் இரங்கலை தெரிவித்துள்ளார்.
மண்ணின் மைந்தன்:
மனோகர் தேவதாஸ் அவர்கள் மரபுக் கட்டிடங்கள் மற்றும் அது போன்ற புராதான இடங்களை ஓவியமாக வரைவதில் அதிக திறன் கொண்டவராக இருந்தார். மதுரையை பூர்வீகமாக கொண்டு வாழ்ந்து வந்த இவர், மதுரையின் ஒவ்வொரு முக்கிய இடத்தையும் ஓவியமாக வரைந்து அனைவரையும் ரசிக வைத்தவர். இவருக்கு இளம் வயதிலேயே கண் பார்வை குறைபாடு நோய் இருந்தது.
ஆரம்ப பள்ளி மாணவர்களுக்கான கல்வி உதவித்தொகை மீண்டும் வழங்கல் – முதல்வர் கோரிக்கை கடிதம்!
Follow our Instagram for more Latest Updates
ஆனால் அவை எதுவும் தனது கலைத்தாகத்தை பாதிக்காத வண்ணம் செயல்பட்டு வந்தார். தொண்டு நிறுவனம் மூலம் ஏழை மக்களின் ஆசியையம் பெற்று வந்தார். இவர் தற்போது 86 வயதை அடைந்துள்ள நிலையில், உடல்நல பாதிப்பு காரணமாக இன்று இயற்கை எய்தினார். இவரது மறைவிற்கு வருத்தம் தெரிவித்து தமிழக முதல்வர் உள்ளிட்ட தலைவர்கள் இரங்கல் செய்திகளை வெளியிட்டு வருகின்றனர்.