கோபிக்கு எதிராக பாக்கியா எடுக்கும் அதிரடி முடிவு? சீரியலில் அடுத்த திருப்பம்!
விஜய் டிவி ‘பாக்கியலட்சுமி’ சீரியலில் கோபியின் உண்மை முகத்தை தெரிந்து கொள்ளும் பாக்கியா இதற்கு பிறகாவது அவரை தண்டிப்பாரா என்ற எதிர்பார்ப்பு எழுந்திருக்கும் நிலையில் அடுத்த திருப்பத்தை நோக்கி ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர்.
பாக்கியலட்சுமி சீரியல்
விஜய் டிவி ‘பாக்கியலட்சுமி’ சீரியல் ரசிகர்கள் எதிர்பார்த்திருந்த அந்த தருணம் இந்த வார எபிசோடில் இடம்பிடித்துள்ளது. அதாவது, ‘பாக்கியலட்சுமி’ சீரியலில் ஒட்டு மொத்த குடும்பத்தையும் ஏமாற்றி விட்டு ராதிகாவுடன் பழகிக் கொண்டிருக்கும் கோபி இப்போது மனைவி பாக்கியாவிடம் சிக்கி இருக்கிறார். இதற்கு முன்பாக கோபியின் ரகசிய காதலை தெரிந்துகொள்ளும் அப்பா ராமமூர்த்தி, மகன் எழில் இருவரும் அந்த விஷயத்தை யாருக்கும் தெரியாமல் மூடி மறைத்து விடுகின்றனர். ஆனால் எப்படியோ இந்த உண்மை ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும் வெளி வரும் போது இருவரும் செய்வதறியாது நிற்கின்றனர்.
Exams Daily Mobile App Download
மறுபக்கத்தில் ராதிகாவுடன் பழகும் விஷயத்தை எழில் மற்றும் ராமமூர்த்தி இருவரும் வீட்டில் சொல்ல மாட்டார்கள் என்ற தைரியத்தில் கோபி வழக்கம் போல ராதிகாவுடன் தனது காதலை வளர்த்து வந்தார். ஆனால், பாக்கியா தான் கோபியின் மனைவி என்று அறிந்து கொள்ளும் ராதிகா அவரை விட்டு விலக முடிவு செய்கிறார். இதற்குள் ராஜேஷ் செய்த கலாட்டாவால் கோபியை பற்றி வீட்டில் உள்ள எல்லாருக்கும் தெரிய வருகிறது. இந்த கதையில் இருக்கும் முக்கியமான ட்விஸ்டு என்னவென்றால் கோபி, பாக்கியாவிடம் மாட்டியது தான்.
Freshers பட்டதாரிகளுக்கு TCS iON நிறுவனத்தில் சூப்பர் வேலை அறிவிப்பு – முழு விவரங்கள் இதோ!
அந்த வகையில் இத்தனை நாட்களாக ஒளித்து மறைத்து ராதிகாவுடன் பழகி வந்த கோபி இன்றைய எபிசோடில் கையும் களவுமாக மாட்டி விட்டார். குறிப்பாக, கோபியின் காதலி ராதிகா என்ற உண்மையும் பாக்கியாவுக்கு தெரிய வருகிறது. இதை தொடர்ந்து பாக்கியா எடுக்கப்போகும் முடிவு என்னவாக இருக்கும் என்ற எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் மேலோங்கி இருக்கிறது. ஏனென்றால், உத்தம புருஷன் என்று எண்ணிக்கொண்டிருந்த கோபி ஒரு அயோக்கியன் என்று தெரிந்து கொள்ளும் பாக்கியா இதற்கு பிறகாவது கோபத்தை வெளிப்படுத்துவாரா, கோபியை பழிவாங்குவாரா என்று சில பரபரப்பான திருப்பங்களை ரசிகர்கள் எதிர்பார்த்துள்ளனர்.