11 காய்கறிகள் கொண்ட தொகுப்பு ரூ.105 விலை நிர்ணயம் – சென்னையில் விற்பனை துவக்கம்!

0
11 காய்கறிகள் கொண்ட தொகுப்பு ரூ.105 விலை நிர்ணயம் - சென்னையில் விற்பனை துவக்கம்!
11 காய்கறிகள் கொண்ட தொகுப்பு ரூ.105 விலை நிர்ணயம் - சென்னையில் விற்பனை துவக்கம்!
11 காய்கறிகள் கொண்ட தொகுப்பு ரூ.105 விலை நிர்ணயம் – சென்னையில் விற்பனை துவக்கம்!

தமிழகத்தில் தற்போது நடைமுறையில் இருக்கும் தளர்வில்லா பொது முடக்கம் காரணமாக, வீடுகளுக்கு சென்று காய்கறிகள் விநியோகம் செய்யும் திட்டம் இன்று (மே 24) சென்னை உட்பட பல்வேறு மாநகரங்களில் துவங்கி வைக்கப்பட்டுள்ளது.

காய்கறிகள் விநியோகம்:

கொரோனா 2 ஆம் அலை காரணமாக தமிழகத்தில் ஒரு வாரத்திற்கு முழு ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. முன்னதாக மே 10 ஆம் தேதி முதல் 24 ஆம் தேதி வரை 2 வாரங்களுக்கு முழு ஊரடங்கு நடைமுறைப்படுத்தப்பட்டிருந்தது. இந்த ஊரடங்கு காலத்தில் மக்களின் அத்தியாவசிய சேவைகளான காய்கறிகள், மளிகை கடைகள் போன்றவை இயங்குவதற்கு, காலை 6 மணி முதல் 10 மணி வரை அனுமதி கொடுக்கப்பட்டிருந்தது.

தமிழகத்தில் 10 ஆம் வகுப்பு மதிப்பெண் கணக்கீடு, +2 பொதுத்தேர்வு – அமைச்சர் ஆலோசனை!!

இந்த ஊரடங்கு நடைமுறை போதிய பலன் அளிக்காத வகையில், தமிழகம் முழுவதும் மேலும் ஒரு வாரத்திற்கு ஊரடங்கு நீட்டிக்கப்படும் என கடந்த சனிக்கிழமை (மே 22) அன்று முதல்வர் முக ஸ்டாலின் அறிவித்திருந்தார். தமிழகத்தில் தளர்வில்லா முழு ஊரடங்கு அறிவிக்கப்பட்ட நிலையில், நேற்று (மே 23) ஒரு நாள் மட்டும் பேருந்து சேவைகள் இயக்கத்திற்கும், அனைத்து வகையான கடைகளும் திறந்திருக்கலாம் எனவும் அறிவிக்கப்பட்டது.

இதை தொடர்ந்து நேற்று காலை முதல் இரவு 9 மணி வரை அனைத்து கடைகளிலும் விற்பனைகள் நடைபெற்றது. இது தவிர பொதுமுடக்கம் அறிவிக்கப்பட்ட நாட்களில், மாநிலம் முழுவதும் காய்கறிகள் வண்டிகள் மூலம் விநியோகம் செய்யப்படும் என அரசு சார்பில் அறிவிக்கப்பட்டிருந்தது. தொடர்ந்து இன்று (மே 24) வாகனங்கள் மூலம் வீடுகளுக்கு சென்று காய்கறிகள் வழங்கும் திட்டம் சென்னையில் துவங்கியுள்ளது. அதன் படி காய்கறிகள் கூட்டுறவுத் துறையின் சார்பில் நேரடியாக கொள்முதல் செய்யப்பட்டு, குறைந்த விலையில் விற்பனை செய்யப்படுகிறது.

TN Job “FB  Group” Join Now

இது தவிர சென்னையில் 1610 காய்கறி வாகனங்கள், வியாபாரிகள் மற்றும் தோட்டக்கலைத்துறை சார்பில் விநியோகம் செய்யபட்டு வருகிறது. அந்த வகையில் வெங்காயம், தக்காளி, கத்தரிக்காய் உட்பட 11 வகையான காய்கறிகள் சேர்ந்த ஒரு தொகுப்பு 105 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. மேலும் அனைத்து மாவட்டங்களுக்கும் தேவையான காய்கறிகள், மண்டல வாரியாக பிரித்து வண்டிகள் வழியாக அனுப்பப்பட்டு வருகிறது. அந்த வகையில் வீடுகளுக்கு சென்று காய்கறிகள் வழங்கும் திட்டத்தை, சென்னை மாநகராட்சி ஆணையர் ககன்தீப் சிங் பேடி இன்று (மே 24) துவங்கி வைத்துள்ளார்.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!