இந்தியாவில் குழந்தைகளுக்கான கொரோனா தடுப்பூசி பரிசோதனை – ஜூன் முதல் தொடக்கம்!
இந்தியாவில் குழந்தைகளுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்த பாரத் பயோடெக் நிறுவனம் ஜூன் முதல் வாரம் முதல் பரிசோதனை மேற்கொள்ள உள்ளது என டாக்டர் ரேச்ஸ் எலா தெரிவித்துள்ளார்.
குழந்தைகளுக்கான தடுப்பூசி :
நாடு முழுவதும் பரவி வரும் கொரோனாவை கட்டுப்படுத்த அரசுகள் தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன. மறுபுறமாக மருத்துவ நிபுணர்கள் தடுப்பூசி கண்டுபிடிக்கும் பணியில் ஈடுபட்டு வந்தனர். இதன் விளைவாக இந்தியாவில் கோவாக்சின், கோவிஷீல்டு மற்றும் ரஷ்யாவின் ஸ்பூட்னிக் வி ஆகிய தடுப்பு மருந்துகள் பயன்பாட்டில் உள்ளது. இதனை மத்திய அரசு தயாரிப்பு நிறுவனத்திடம் இருந்து கொள்முதல் செய்து மாநிலக்கங்களுக்கு வழங்கி வருகிறது.
11 காய்கறிகள் கொண்ட தொகுப்பு ரூ.105 விலை நிர்ணயம் – சென்னையில் விற்பனை துவக்கம்!
முன்னதாக 45 வயதுக்கு மேற்பட்டோருக்கு வழங்கப்பட்டு வந்த கொரோனா தடுப்பூசி 18 வயதிற்கு மேற்பட்ட அனைவருக்கும் வழங்கப்படும் என மாநில அரசுகள் அறிவித்துள்ளன. இந்த ஆண்டு இறுதிக்குள் கோவாக்சின் உற்பத்தி திறனை 70 கோடி அளவுகளாக பாரத் பயோடெக் அதிகரிக்கும் என டாக்டர் ரேச்ஸ் எலா கூறியுள்ளார். இதை தொடர்ந்து குழந்தைகளுக்கும் கொரோனா தடுப்பூசி செலுத்த ஆய்வுகள் நடைபெற உள்ளது. ஜூன் மாதம் முதல் குழந்தைகளுக்கான தடுப்பூசி பரிசோதனையை பாரத் பயோடெக் நிறுவனம் தொடங்கும்.
TN Job “FB Group” Join Now
பாரத் பயோடெக்கின் குழந்தைகள் தடுப்பூசி சோதனைகள் இந்த ஆண்டின் மூன்றாம் காலாண்டில் உரிமத்தைப் பெறக்கூடும் அந்நிறுவனம் கூறியுள்ளது. இந்த தடுப்பூசி நாங்களும், இந்திய மருத்துவ கவுன்சிலும் இணைந்து உருவாக்கி உள்ளோம். ரூ.1,500 கோடிக்கு மேல் கொள்முதல் செய்துள்ளது. இது எங்கள் வணிகத்தை மேம்படுத்தும் என்று வணிக மேம்பாடு மற்றும் சர்வதேச ஆலோசனை தலைவர் டாக்டர் ரேச்ஸ் எலா தெரிவித்துள்ளார்.