இன்று முதல் ஜூன் 7 வரை 144 தடை உத்தரவு நீட்டிப்பு – காவல்துறை ஆணையர் அறிவிப்பு!!
கர்நாடகா மாநிலம் பெங்களூரில் கொரோனா தொற்று அதிகரித்து வருவதன் காரணமாக, அந்த பகுதியில் தற்போது நடைமுறையில் இருக்கும் 144 தடை உத்தரவை ஜூன் 7 வரை நீட்டிப்பதாக காவல்துறை ஆணையர் அறிவித்துள்ளார்.
தடை உத்தரவு
கர்நாடகா மாநிலத்தில் மே மாத துவக்கத்தில் இருந்து கொரோனா பாதிப்பானது 50 ஆயிரத்துக்கும் மேலாக பதிவு செய்யப்பட்டு வந்தது. குறிப்பாக பெங்களூர் மாநகரத்தில் மட்டும் ஒரு நாளைக்கு 30 ஆயிரத்துக்கும் மேலாக கொரோனா பாதிப்புகள் ஏற்பட்டது. அதன் காரணமாக மாநிலம் முழுவதும் முழு ஊரடங்கு உத்தரவு நடைமுறைப்படுத்தப்பட்டது. பெங்களூரிலும் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. தொடர்ந்து மாநிலம் முழுவதும் கொரோனா பாதிப்பு உயர்ந்து வருவதன் காரணமாக இந்த ஊரடங்கு உத்தரவு, ஜூன் 7 ஆம் தேதி வரை மேலும் நீட்டிக்கப்பட்டுள்ளது.
இந்தியாவில் குழந்தைகளுக்கான கொரோனா தடுப்பூசி பரிசோதனை – ஜூன் முதல் தொடக்கம்!
தற்போதுள்ள சூழலில் மாநிலம் முழுவதும் கொரோனா நோய் தொற்று பாதிப்பானது ஒரு நாளைக்கு 30 ஆயிரம் வரை பதிவு செய்யப்படுகிறது. இருந்தாலும் நோய் பரவலை இன்னும் கட்டுக்குள் கொண்டு வர ஜூன் 7 ஆம் தேதி வரை ஊரடங்கு அமலில் இருக்கும் என முதல் மந்திரி எடியூரப்பா அறிவித்துள்ளார். அதே நேரத்தில் பெங்களூர் மாநகரத்திலும் 144 தடை உத்தரவானது, ஜூன் 7 வரை நீட்டிக்கப்படும் என காவல்துறை ஆணையர் கமல்பந்த் உத்தரவிட்டுள்ளார்.
TN Job “FB Group” Join Now
மேலும் இந்த தடை உத்தரவு காலத்தில் அத்தியாவசிய பொருட்களுக்கு மட்டுமே காலை 6 மணி முதல் 10 மணி வரை அனுமதி கொடுக்கப்பட்டுள்ளது. இந்த தடையை மீறி வெளியே வருபவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் காவல்துறையினருக்கு அம்மாநில முதல்வர் உத்தரவிட்டுள்ளார். அதன் காரணமாக தற்போது பெங்களூர் நகரம் முழுவதும் காவல்துறையினர் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.