தமிழகத்தில் 10 ஆம் வகுப்பு மதிப்பெண் கணக்கீடு, +2 பொதுத்தேர்வு – அமைச்சர் ஆலோசனை!!
தமிழகத்தில் கொரோனா பரவல் காரணமாக 10 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வு ரத்து செய்யப்பட்டதை தொடர்ந்து எவ்வாறு மதிப்பெண் வழங்குவது என்பது குறித்தும், 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வு நடத்துவது குறித்தும் ஆலோசனை நடைபெற்று வருகிறது.
பள்ளிக்கல்வித்துறை ஆலோசனை:
தமிழகத்தில் கொரோனா இரண்டாம் அலை தாக்கம் வேகமாக பரவ தொடங்கியது. அதனால் பள்ளிகள் திறக்கப்படாமல் ஆன்லைன் மூலமாக வகுப்புகள் நடத்தப்பட்டன. அதிகரித்து வரும் கொரோனா காரணமாக பள்ளிகளில் நேரடி தேர்வுகள் நடத்த முடியாது என்பதால் 1 முதல் 11 ஆம் வகுப்பு வரை மாணவர்களுக்கு தேர்வுகள் நடைபெறாமல் தேர்ச்சி வழங்கப்பட்டது.
தமிழகத்தில் இளம் மழலையர் பள்ளிகள் திறப்பு – அரசுக்கு கோரிக்கை!!
ஆனால் 10 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு மதிப்பெண் கட்டாயம் என்பதால் அவர்களுக்கு எவ்வாறு மதிப்பெண்களை கணக்கிட்டு சான்றிதழ் தயார் செய்வது என குழப்பம் எழுந்துள்ளது. கடந்த ஆண்டும் இதே போல தேர்வுகள் நடைபெறாமல் தேர்ச்சி வழங்கப்பட்டது ஆனால் காலாண்டு, அரையாண்டு தேர்வுகள் நடத்தப்பட்டதால் அதன் அடிப்படையில் மதிப்பெண்கள் வழங்கப்பட்டது.
TN Job “FB Group” Join Now
இந்த ஆண்டு எந்த தேர்வும் நடைபெறவில்லை அதனால் 10 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு எவ்வாறு மதிப்பெண் வழங்குவது என்பது குறித்தும், 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வு நடத்துவது குறித்தும் கல்வித்துறை அதிகாரிகளுடன் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் ஆலோசனையில் ஈடுபட்டுள்ளார். இந்த ஆலோசனை முடிவில் முக்கிய முடிவுகள் எடுக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
12 ஆம் வகுப்பு பொதுத் தேர்வு ரத்து செய்ய வேண்டும் என்று மாணவர்கள் சங்கம் கேட்டுக்கொள்கிறோம்