ரூ.30,000 ஊதியத்தில் டிகிரி முடித்தவர்களுக்கான வேலை – விண்ணப்பிக்க கடைசி வாய்ப்பு….!
காஞ்சிபுரத்தில் உள்ள One Stop Centre எனும் ஒரு நிறுத்த மையம் ஆனது வேலைவாய்ப்பு குறித்த புதிய அறிவிப்பு ஒன்றை சமீபத்தில் வெளியிட்டது. இதில் காலியாக உள்ள Case Worker, Security Guard, Multi-Purpose Helper பணிக்கான பணியிடங்கள் நிரப்ப உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இப்பணிக்கு விண்ணப்பிக்க தேவையான தகுதிகள் குறித்த முழு விவரங்களும் கீழே தொகுத்து வழங்கப்பட்டுள்ளது. ஆர்வமுள்ள மற்றும் தகுதியானவர்கள் இறுதி நாள் முடிவதற்குள் விண்ணப்பித்து பயனடையுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.
வேலைவாய்ப்பு விவரங்கள்:
- Case Worker பணிக்கு 4 பணியிடங்கள், Centre Administrator, Senior Counsellor, Security Guard மற்றும் Multi-Purpose Helper ஆகிய பணிகளுக்கு தலா ஒரு பணியிடங்கள் வீதம் மொத்தமாக 08 காலிப்பணியிடங்கள் தற்போது ஒதுக்கப்பட்டிருக்கிறது.
- விண்ணப்பதாரர்கள் அரசு அல்லது அரசால் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகங்கள் அல்லது கல்வி நிலையங்களில் விண்ணப்பிக்கும் பணிக்கு தொடர்புடைய பாடப்பிரிவில் Degree, Master Degree முடித்திருக்க வேண்டும். மேலும் கல்வித் தகுதி குறித்து அறிவிப்பில் காணலாம்.
- மேற்கண்ட பணிகளுக்கு விண்ணப்பதாரர்கள் கட்டாயம் 1 ஆண்டு counselling பிரிவில் முன் அனுபவம் வைத்திருக்க வேண்டும். மேலும் இத்துடன் விண்ணப்பதாரர்கள் குறைந்தது 4 ஆண்டுகள் பெண்களுக்கு எதிராக நடக்கும் பிரச்சனைகளுக்கு தீர்வு காணும் அரசு அல்லது அரசு சார்ந்த நிறுவனங்கள் அல்லது திட்டங்களில் பணிபுரிந்த அனுபவம் வைத்திருக்க வேண்டும். மேலும் விரிவான தகவலுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பை பார்க்கவும்.
- தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு பணியின் அடிப்படையில் ரூ.30,000/- வரை ஊதியம் வழங்கப்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
- மேற்கண்ட பணிகளுக்கு விண்ணப்பதாரர்கள் நேரடியாக நேர்காணல் (Interview) வாயிலாக தேர்வு செய்யப்பட்டு பணியமர்த்தப்படுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
விண்ணப்பிக்கும் முறை:
ஆர்வமுள்ள மற்றும் தகுதியானவர்கள் அதிகாரபூர்வ தளத்தில் விண்ணப்ப படிவம் பெற்று பூர்த்தி செய்து 23.06.2022ம் தேதிக்குள் விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்பட்டிருந்தது. தற்போது அதற்கான கால அவகாசம் நாளையுடன் முடிய உள்ளதால் விண்ணப்பதாரர்கள் விரைந்து விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.
Ok