இனி இ-சேவை மையங்கள் மூலம் PSTM சான்றிதழ்கள் – அரசாணை வெளியீடு!
தமிழகத்தில் இ-சேவை மையங்கள் மூலம் பிஎஸ்டிஎம் சான்றிதழ்கள் விநியோகம் செய்யலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இது குறித்து முதன்மை கல்வி அதிகாரிகளுக்கு பள்ளிக் கல்வித் துறை ஆணையர் உத்தரவு பிறப்பித்துள்ளார்.
பிஎஸ்டிஎம் சான்றிதழ்:
தமிழகத்தில் தற்போது இயல்பு நிலை திரும்பியுள்ளதால் பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் வழக்கம் செயல்பட்டு வருகின்றன. மேலும் 10,12ம் வகுப்புகளுக்கு பொதுத்தேர்வுகள் நடத்தப்பட்டு அனைத்து கல்லூரிகளிலும் மாணவர் சேர்க்கைகள் நடைபெற்று வருகின்றன. இதை அடுத்து அரசு பள்ளி, கல்லூரிகளில் காலியாக உள்ள ஆசிரியர் பணியிடங்கள் நிரப்ப ஏற்பாடுகள் நடைபெற்று வருகின்றன. இந்த நிலையில் மாணவர்களின் நலன் கருதி பள்ளி கல்வித்துறை பல சீர்திருத்தங்களை செயல்படுத்தி வருகிறது. மேலும் கடந்த இரண்டு வருடங்களாக கொரோனா பரவல் காரணமாக பள்ளி மற்றும் கல்லூரிகள் செயல்படாமல் இருந்தது. இதனை தொடர்ந்து அரசு மூலம் நடத்தப்படும் போட்டித் தேர்வுகளும் நடைபெறாமல் இருந்தது.
தற்போது தொற்று குறைந்துள்ளதால் அனைத்து போட்டித் தேர்வுகளும் நடத்தப்பட்டு வருகின்றன. இத்தகைய போட்டி தேர்வுகளில் ஒரு சில திருத்தங்களை அரசு அறிமுகப்படுத்தி உள்ளது. அதாவது ஏற்கனவே நடைமுறையில் இருக்கும் சாதி வாரியான இட ஒதுக்கீடு, பின் தங்கிய வகுப்பினருக்கான இட ஒதுக்கீடு ஆகியவற்றுடன் தற்போது தமிழ் வழியில் கல்வி பயின்றவர்களுக்கு சிறப்பு மதிப்பெண் சலுகை வழங்கப்படும் என்று அரசு அறிவித்திருந்தது. இந்த நிலையில் தற்போது நடைபெற்று முடிந்த TNPSC தேர்வுகளில் தமிழ் வழியில் பயின்ற சான்றிதழை இணைக்க வேண்டும் என்று அரசு அறிவித்திருந்தது.
தமிழகத்தில் உள்ள ரேஷன் கடைகளில் திடீர் ஆய்வு – கூட்டுறவு துறை செயலர் விளக்கம்!
ஆனால் இந்த முறையில் மாணவர்கள் அவர்கள் பயின்ற பள்ளிகளுக்கு சென்று சான்றிதழை பெறுவதில் சிரமம் இருந்து வந்த நிலையில் தற்போது தமிழக அரசு இ-சேவை மையங்கள் மூலம் பிஎஸ்டிஎம் சான்றிதழ்கள் விநியோகம் செய்யலாம் என அரசாணை பிறப்பித்துள்ளது. அதன்படி இ-சேவை மையங்கள் மூலம் இதுவரை பெறப்பட்ட விண்ணப்பங்கள் மின்னஞ்சல் மூலம், அந்தந்த மாவட்ட முதன்மை கல்வி அதிகாரிகளுக்கு அனுப்பப்படும். மேலும் இவ்வாறு பெறப்படும் சான்றிதழ்கள் பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு பகிரப்படும். அதன் பிறகு பள்ளியில் பராமரிக்கப்படும் பதிவேடுகளின் அடிப்படையில் விண்ணப்பங்களின் நம்பக தன்மையை தலைமை ஆசிரியர்கள் சரிபார்த்து உறுதி செய்ய வேண்டும். பிறகு தகுதியானவர்களுக்கு மட்டும் பிஎஸ்டிஎம் சான்றிதழ் வழங்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
To Subscribe => Youtube Channel கிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebook கிளக் செய்யவும்
To Join => Telegram Channel கிளிக் செய்யவும்