தமிழகத்தில் உள்ள ரேஷன் கடைகளில் திடீர் ஆய்வு – கூட்டுறவு துறை செயலர் விளக்கம்!
தமிழகத்தில் உள்ள ரேஷன் கடைகள் அனைத்தும் முறையாக இயங்குகின்றதா எனவும், ஏதேனும் குறைபாடுகள் இருக்கிறதா எனவும் கூட்டுறவுத் துறை முதன்மைச் செயலர் ராதாகிருஷ்ணன் ஆய்வு செய்துள்ளார்.
ரேஷன் கடைகளில் ஆய்வு:
தமிழகத்தில் உள்ள ரேஷன் கடைகள் வாயிலாக பொதுமக்களுக்கு அரிசி, பருப்பு, கோதுமை, எண்ணெய் முதலான பல ரேஷன் பொருட்கள் மலிவு விலையில் வழங்கப்பட்டு வருகிறது. மேலும், இந்த ரேஷன் பொருட்களை எந்தவித குறையும் இல்லாமல் அனைத்து பொது மக்களுக்கும் ஒரே மாதிரியாக வழங்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதனிடையே, ஒரு சில ரேஷன் கடைகளில் ரேஷன் பொருட்கள் சரியான அளவில் வழங்கப்படுவதில்லை என்கிற குற்றச்சாட்டும் எழுந்து வருகிறது.
மேலும், ரேஷன் கடைகளில் கீழே சிந்தும் பொருட்களை பொதுமக்களுக்கு வழங்குவதாகவும் குற்றசாட்டு வைக்கப்பட்டது. இதனால், ரேஷன் பொருட்களை சிந்தாமல் பொது மக்களுக்கு வழங்க வேண்டும் எனவும், கீழே சிந்தும் பொருட்களை பொதுமக்களுக்கு வழங்க வேண்டாம் எனவும், ரேஷன் கடையினை தூய்மையாக வைத்துக்கொள்ள வேண்டும் எனவும் அறிவுரைகள் வழங்கப்பட்டுள்ளது. இது மட்டுமல்லாமல் பலரும் ரேஷன் கடை பொருட்களை உபயோகப்படுத்தாமல் கள்ளச்சந்தையில் விற்பனை செய்வதாகவும் புகார் எழுந்தது.
தமிழகத்தில் அரசு பேருந்துகளில் பயணிப்போருக்கான புதிய வழிமுறைகள் – முக்கிய அறிவிப்பு!
இதனால், ரேஷன் பொருட்களை பெற தகுதியானவர்களுக்கு மட்டுமே ரேஷன் பொருட்களை வழங்க வேண்டும் என அதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்நிலையில், தமிழகத்தில் உள்ள ரேஷன் கடைகள் எவ்வாறு செயல்படுகின்றன எனவும், ரேஷன் கடைகளில் ஏதேனும் குறைபாடுகள் இருக்கிறதா என தமிழக அரசு சார்பாக கூட்டுறவுத் துறை முதன்மைச் செயலர் ராதாகிருஷ்ணன் ஆய்வு செய்துள்ளார். இதில் முதற்கட்டமாக சென்னை அடையாறில் உள்ள இரண்டு ரேஷன் கடைகளில் ஆய்வு செய்யப்பட்டுள்ளது.
To Subscribe => Youtube Channel கிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebook கிளக் செய்யவும்
To Join => Telegram Channel கிளிக் செய்யவும்