அரசு பேருந்து நடத்துனர், ஓட்டுநர்களுக்கு முக்கிய உத்தரவு – போக்குவரத்துக்கழகம் அதிரடி!!
தமிழகத்தில் அரசு பேருந்துகளின் பயணிகளிடம் கனிவாக நடந்து கொள்ள வேண்டும் மற்றும் தகாத வார்த்தைகளை பேசக்கூடாது உள்ளிட்ட பல்வேறு அறிவுறுத்தல்களை சென்னை போக்குவரத்து கழகம் நடத்துனர் மற்றும் ஓட்டுநர்களுக்கு சுற்றறிக்கை ஒன்றை அனுப்பியுள்ளது.
அரசு பேருந்து பயணிகள்
தமிழகத்தில் பொது போக்குவரத்துகளில் ஒன்றான பேருந்துகளில் நாள்தோறும் சாமானிய மக்கள் தங்களின் அலுவலகத்திற்கும், வீடுகளுக்கும் உள்ளிட்ட பல்வேறு இடங்களுக்கு பயணித்து வருகின்றனர். இந்த நிலையில் அரசு பேருந்துகளில் பயணிக்கும் பயணிகளிடம் நடத்துனர், ஓட்டுநர் தகாத முறையில் நடந்து கொள்வதாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன. அதாவது பயணிகள் சில்லறை கேட்பதால் தகாத வார்த்தைகளில் நடத்துனர்கள் பயணிகளை திட்டுவதாகவும், நிர்ணயிக்கப்பட்ட பேருந்து நிறுத்தங்களில் நிறுத்தாமல் சென்று விடுவதாகவும் குற்றம் சுமத்துகின்றனர்.
Follow our Instagram for more Latest Updates
அத்துடன் பயணிகள் வைத்திருக்கும் பொருட்களுக்கு சரியான எடைக்குரிய பயண சீட்டை கொடுக்க மறுப்பதாகவும் குற்றம் சாட்டியுள்ளனர். இதனை தடுக்கும் பொருட்டு அரசு பேருந்து ஓட்டுனர், நடத்துனர்களுக்கு சென்னை போக்குவரத்து கழகம் சில அறிவுரைகளை வழங்கியுள்ளது. மேலும் இது தொடர்பாக சுற்றறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, பேருந்து ஓட்டுனர் மற்றும் நடத்துனர்கள் பணியின் போது தகாத வார்த்தைகளை பேசுவதை தவிர்க்க வேண்டும். அத்துடன் கைக்கலப்பில் ஈடுபடக்கூடாது எனவும் அறிவுறுத்தியுள்ளது.
ரூ.5000யை நெருங்கிய ஒரு கிராம் தங்கம் விலை.. நகைப்பிரியர்களுக்கு ஷாக் – இன்றைய நிலவரம்!
Exams Daily Mobile App Download
அத்துடன் பேருந்துகள் அதற்குரிய நிர்ணயிக்கப்பட்ட இடங்களில் நிறுத்தி பயணிகளை சரிவர இறக்கி விட வேண்டும் எனவும் வேறு வழித்தடங்களிலோ அல்லது மற்ற சாலைகளிலோ மாநகர பேருந்துகளை இயக்க கூடாது எனவும் அறிவுறுத்தி உள்ளது. மேலும் பயணிகள் கொண்டு வரும் சுமைகளுக்கு தகுந்தவாறு அதற்குரிய சுமை கட்டண பயணச் சீட்டை வழங்க வேண்டும் எனவும் கூறியுள்ளது.