தமிழகத்திற்கு அடுத்த 3 நாட்கள் ஆரஞ்சு அலெர்ட் – வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை!
வங்கக்கடலில் உருவாகியுள்ள குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக தமிழகத்தில் நவம்பர் 25, 26, 27 ஆகிய தினங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மேலும் தமிழகத்திற்கு ஆரஞ்ச் அலர்ட் எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளது.
வானிலை தகவல்:
வங்கக்கடலில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கியுள்ளது. அதனால் நவம்பர் மாத தொடக்கத்தில் இருந்தே தமிழகத்தில் அனைத்து மாவட்டங்களிலும் பரவலாக கனமழை பெய்து வருகிறது. கடந்த நவம்பர் 9 முதல் தொடர்ந்து ஒரு வாரம் பெய்த அதிக கனமழையால் கடலோர மாவட்டங்கள் பெரிதும் பாதிக்கப்பட்டது. சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு, கடலூர், ஆகிய மாவட்டங்களில் கனமழை காரணமாக தாழ்வான பகுதிகளில் மழைநீர் தேங்கி சாலைகள் வெள்ளக்காடாக மாறியது.
மத்திய அரசு ஊழியர்களுக்கு அடிப்படை சம்பள உயர்வு? முக்கிய ஆலோசனை!
மேலும் குடியிருப்பு பகுதிகளில் தேங்கிய மழைநீர் வீடுகளில் புகுந்து பொதுமக்களின் உடமைகளை சேதப்படுத்தியுள்ளது. இதனால் பொது மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. அத்தியாவசிய பொருட்களை வாங்க கூட வெளியில் செல்ல முடியாமல் தவித்து வருகின்றனர். தற்போது அனைத்து வகுப்புகளுக்கும் பள்ளிகள் திறக்கப்பட்டு நேரடி வகுப்புகள் வழக்கம் போல நடைபெற தொடங்கியது. இந்த நேரத்தில் பெய்து வரும் வடகிழக்கு பருவமழையால் பள்ளி, கல்லூரிகளுக்கும் விடுமுறை விடப்பட்டது.
நகைப்பிரியர்களுக்கு ஜாக்பாட் – இரண்டே நாளில் ரூ.904 குறைந்த ஆபரணத் தங்கத்தின் விலை!
அதனை தொடர்ந்து தற்போது மீண்டும் தமிழகத்தில் கனமழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. தெற்கு வங்கக்கடலில் 5.8 கி.மீ உயரத்தில் மேலடுக்கு சுழற்சி இன்று இரவு குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக உருவாகும் பட்சத்தில் தமிழகத்தில் நவம்பர் 25, 26, 27 ஆகிய தினங்களில் கனமழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதனால் மேற்கண்ட தினங்களில் ஆரஞ்ச் அலர்ட் எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளது.