திருப்பதி செல்ல திட்டமிடுவோர் கவனத்திற்கு – தரிசனத்திற்கு 6 மாதத்திற்குள் முன்பதிவு அவசியம்!

0
திருப்பதி செல்ல திட்டமிடுவோர் கவனத்திற்கு - தரிசனத்திற்கு 6 மாதத்திற்குள் முன்பதிவு அவசியம்!
திருப்பதி செல்ல திட்டமிடுவோர் கவனத்திற்கு - தரிசனத்திற்கு 6 மாதத்திற்குள் முன்பதிவு அவசியம்!
திருப்பதி செல்ல திட்டமிடுவோர் கவனத்திற்கு – தரிசனத்திற்கு 6 மாதத்திற்குள் முன்பதிவு அவசியம்!

ஆந்திர மாநிலத்தில் தொடர்ந்து பெய்து வரும் கனமழை காரணமாக தரிசனத்திற்கு அனுமதி மறுக்கப்பட்டிருந்தது. தற்போது வரும் 30ம் தேதி வரை பக்தர்கள் தரிசனத்திற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக தேவஸ்தானம் தகவல் வெளியிட்டுள்ளது.

திருப்பதி தரிசனம்:

ஆந்திர மாநிலத்தில் உள்ள திருப்பதி ஏழுமலையான் கோயிலில் கொரோனா பரவல் குறைந்து வருவதை தொடர்ந்து பக்தர்கள் தரிசனத்திற்கு அனுமதி வழங்கப்பட்டது. அதனை தொடர்ந்து கடந்த சில தினங்களாக பெய்துவரும் வடகிழக்கு பருவமழையால் திருமலையில் பல்வேறு சேதங்கள் ஏற்பட்டுள்ளன. அதனால் பக்தர்களுக்கு தரிசனம் மறுக்கப்பட்டிருந்தது. அதாவது தற்போது இந்தியாவில் தொடங்கியுள்ள வடகிழக்கு பருவமழையானது தென் பகுதிகளில் பரவலாக பெய்து வருகிறது. அந்த வகையில் ஆந்திர மாநிலத்தில் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது.

தமிழகத்திற்கு அடுத்த 3 நாட்கள் ஆரஞ்சு அலெர்ட் – வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை!

அவ்வாறு பெய்து வரும் கனமழையால் திருமலைக்கு செல்லும் வழிகள் பல்வேறு இடங்களில் சேதமடைந்துள்ளன. அதனை சரிசெய்யும் பணியானது தீவிரமாக நடைபெற்று வருகிறது. தற்போது மழையின் தாக்கம் குறைந்துள்ளதால் மீண்டும் பக்தர்களுக்கு தரிசனத்திற்கு தேவஸ்தானம் அனுமதி வழங்கி அறிவிப்பு வெளியிட்டுள்ளது. அதாவது 18ம் தேதி முதல் தரிசன டிக்கெட்டுகள் வைத்திருக்கும் பக்தர்களுக்கு வரும் 30ம் தேதி வரை தரிசனம் வழங்கப்பட உள்ளது. 30ம் தேதிக்கு பிறகு தரிசனம் செய்ய உள்ளவர்கள் ஆன்லைனில் 6 மாதத்திற்குள் மீண்டும் முன்பதிவு செய்திருக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.

மத்திய அரசு ஊழியர்களுக்கு அடிப்படை சம்பள உயர்வு? முக்கிய ஆலோசனை!

மேலும் மழையின் காரணமாக ஏற்படும் பாதிப்புகளை உடனே சரிசெய்யும் விதமாக உரிய ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் தேவஸ்தானம் அறிவித்துள்ளது. எனவே பக்தர்கள் எந்தவித பயமும் இன்றி தரிசனத்திற்கு வரலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் தற்போது பக்தர்கள் இலவச தரிசனம், ரூ.300 கட்டண தரிசனம், ஆர்ஜித சேவை, ஸ்ரீ வாணி அறக்கட்டளை தரிசனம் உள்ளிட்டவைகளுக்கு அனுமதி வழங்கப்பட்டு வருவதாகவும் தேவஸ்தானம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!