மத்திய அரசு ஊழியர்களுக்கு அடிப்படை சம்பள உயர்வு? முக்கிய ஆலோசனை!

0
மத்திய அரசு ஊழியர்களுக்கு அடிப்படை சம்பள உயர்வு? முக்கிய ஆலோசனை!
மத்திய அரசு ஊழியர்களுக்கு அடிப்படை சம்பள உயர்வு? முக்கிய ஆலோசனை!
மத்திய அரசு ஊழியர்களுக்கு அடிப்படை சம்பள உயர்வு? முக்கிய ஆலோசனை!

மத்திய அரசுத் துறையில் பணிபுரியும் ஊழியர்களுக்கு 31% அகவிலைப்படி (DA) உயர்வை தொடர்ந்து அடிப்படை சம்பளமும் வருகின்ற 2022ம் புத்தாண்டு முதல் உயர்வை காணும் என தகவல்கள் வெளியாகியுள்ளது. இது குறித்த கூடுதல் விவரங்களை இப்பதிவில் காணலாம்.

ஊதிய உயர்வு

சமீபத்தில் மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களின் அகவிலைப்படி (DA) தொகை 31% மாக அதிகரிக்கப்பட்டதை தொடர்ந்து அவர்களின் அடிப்படை ஊதியமும் அதிகரிக்க வாய்ப்புகள் இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. அதாவது மத்திய மற்றும் மாநில அரசு ஊழியர்களின் பிட்மென்ட் காரணியை பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசு உயர்த்தி அறிவிக்கலாம் என தெரிகிறது. இதன் மூலம் அரசு ஊழியர்களின் அடிப்படை ஊதியம் அல்லது குறைந்தபட்ச ஊதியமும் அதிகரிக்கும்.

நகைப்பிரியர்களுக்கு ஜாக்பாட் – இரண்டே நாளில் ரூ.904 குறைந்த ஆபரணத் தங்கத்தின் விலை!

இப்போது 7வது ஊதியக் குழுவின் சமீபத்திய தகவலின் படி, பிட்மென்ட் காரணியை உயர்த்துவது குறித்து மத்திய அரசு ஆலோசித்து வருவதாகவும், இந்த புத்தாண்டில் இது குறித்த அறிவிப்பு கொடுக்கப்படலாம் என சொல்லப்பட்டு வருகிறது. இதற்கிடையில் மத்திய அரசு ஊழியர்களின் குறைந்தபட்ச ஊதியம் ரூ.18,000 லிருந்து ரூ.26,000 ஆகவும், பிட்மென்ட் காரணியை 2.57 மடங்கில் இருந்து 3.68 ஆகவும் உயர்த்த வேண்டும் என்று மத்திய அரசு ஊழியர் சங்கங்கள் நீண்ட காலமாக கோரிக்கை விடுத்து வருகின்றன.

இந்நிலையில் 2022ம் ஆண்டு பிப்ரவரி 1ம் தேதியன்று யூனியன் பட்ஜெட் தாக்கல் செய்யப்படுவதற்கு முன்பு மத்திய ஊழியர்களின் பிட்மென்ட் காரணி முடிவு செய்யப்படலாம் என ஊடக செய்திகள் கூறுகிறது. அந்த வகையில் மத்திய அரசு ஊழியர்களின் பிட்மென்ட் காரணியை உயர்த்துவது குறித்து அரசு அறிவிப்புகளை வெளியிட்டால், அதன் விளைவாக அவர்களின் சம்பளம் உயரும். இது தவிர பொருத்துதல் காரணி அதிகரிப்புடன் ஊழியர்களின் குறைந்தபட்ச ஊதியமும் அதிகரிக்கும்.

மத்திய அரசு பணியாளர்கள் தற்போது 2.57 சதவீதம் என்ற அடிப்படையில் பிட்மென்ட் காரணியின் கீழ் சம்பளம் பெறுகின்றனர். இது 3.68 சதவீதமாக உயர்த்தப்பட்டால், ஊழியர்களின் குறைந்தபட்ச சம்பளம் ரூ.8,000 ஆக உயரும். அதாவது மத்திய அரசு ஊழியர்களின் குறைந்தபட்ச ஊதியம் ரூ.18,000 லிருந்து ரூ.26,000 ஆக உயர்த்தப்படும். மத்திய அமைச்சரவை கடந்த ஜூன் 2017ம் ஆண்டில் 34 மாற்றங்களுடன் 7வது ஊதியக் குழுவின் பரிந்துரைகளுக்கு ஒப்புதல் அளித்தது.

அண்ணா பல்கலை இன்ஜினியரிங் மாணவர்களுக்கு முக்கிய அறிவிப்பு – 18% GST விதிப்பு!

இதன் கீழ் மத்திய அரசின் தொடக்க நிலை ஊழியர்களின் அடிப்படை ஊதியத்திற்கு வழங்கப்படும் புதிய ஊதிய விகிதங்கள் மாதத்திற்கு ரூ.7,000 லிருந்து ரூ.18,000 ஆகவும், உயர்நிலை ஊழியர்கள் அதாவது செயலர் போன்ற பதவிகளுக்கு ரூ.90,000 லிருந்து ரூ.2.5 லட்சமாகவும் ஊதியம் உயர்த்தப்பட்டது. குறிப்பாக வகுப்பு 1 அதிகாரிகளுக்கு, ஆரம்ப சம்பளம் ரூ.56,100 ஆக அதிகரித்தது குறிப்பிடத்தக்கது.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!