நகைப்பிரியர்களுக்கு ஜாக்பாட் – இரண்டே நாளில் ரூ.904 குறைந்த ஆபரணத் தங்கத்தின் விலை!
ஆபரணத் தங்கத்தின் விலையானது இன்று அதிரடியாக சவரனுக்கு ரூ.904 குறைந்துள்ளது. இந்த விலை குறைவினால் நகைப்பிரியர்கள் அனைவரும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
தங்கத்தின் விலை:
ஆபரணத் தங்கத்தின் விலை தொடர்ந்து அதிக அளவில் ஏறி வந்தது. வணிக சந்தையில் தங்கத்தின் மீதான முதலீடுகளும் அதிக அளவில் இருந்தது. கொரோனா தொற்று ஊரடங்கு காரணமாக மற்ற முதலீடுகளில் தொடர்ந்து சரிவு ஏற்பட்டு வந்த நிலையில், முதலீட்டாளர்களின் கவனம் தங்கத்தின் மீது விழுந்துள்ளது. இதனால் தங்கத்தின் விலை அதிகரித்து வந்தது. விலை குறைவு என்பது அவ்வப்போது நிகழ்ந்து வந்தாலும், அவை மிகவும் சிறிய அளவிலான தொகையாக மட்டுமே இருந்து வந்தது. ஆனால் விலை உயர்வு என்பது ஆயிரக்கணக்கில் இருந்து வருகிறது.
அண்ணா பல்கலை இன்ஜினியரிங் மாணவர்களுக்கு முக்கிய அறிவிப்பு – 18% GST விதிப்பு!
இதனால் நகை வாங்க திட்டமிட்டிருந்தவர்கள் மற்றும் சுப நிகழ்ச்சிகள் நடத்த திட்டமிட்டிருந்த மக்கள் அதிக அளவில் பாதிக்கப்பட்டனர். கடந்த சில வாரங்களாக விலை உயர்வினால் தங்கத்தின் விலை ரூ. 37,000 க்கும் அதிகமாக இருந்து வந்தது. இந்நிலையில், கடந்த இரண்டு நாட்களில் மட்டும் அதிரடியாக ரூ. 904 குறைந்துள்ளது. நேற்றைய விலை நிலவரப்படி, ரூ.768 குறைந்து ஒரு சவரன் தங்கம் ரூ. 36,136 ஆக விற்பனை செய்யப்பட்டது. இதனால் மக்கள் நிம்மதி அடைந்தனர். இந்நிலையில், மேலும் விலை குறைவு ஏற்பட்டுள்ளது.
தமிழக கூட்டுறவு வங்கிகளில் 5 பவுன் வரை நகைக்கடன் தள்ளுபடி – பொதுமக்கள் வலியுறுத்தல்!
இன்றைய காலை நேர நிலவரப்படி, தங்கம் விலை சவரனுக்கு ரூ.136 குறைந்துள்ளது. இதனால் சென்னையில், 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை ஒரு கிராமிற்கு ரூ.17 குறைந்து, ரூ.4500க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு சவரன் ஆபரணத் தங்கம் ரூ.632 குறைந்து ரூ.36,000 க்கு விற்பனை செய்யப்படுகிறது. வெள்ளியில் விலையிலும் மாற்றம் ஏற்பட்டுள்ளது. சென்னையில் ஒரு கிராம் வெள்ளி விலை ரூ.67.60 ஆகவும் ஒரு கிலோ வெள்ளி 67,600 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. இந்த விலை குறைவு சந்தர்ப்பத்தை மக்கள் பயன்படுத்தி திட்டமிட்டபடி நகைகளை வாங்கிக் கொள்ளும் படி அறிவுறுத்தப்படுகிறது.