8 மாவட்டங்களுக்கு ‘ஆரஞ்சு’ அலர்ட் எச்சரிக்கை – வானிலை ஆய்வு மையம் அறிக்கை!
மத்தியப் பிரதேசத்தில் கடந்த இரண்டு நாட்களாக பெய்து வரும் மழையின் காரணமாக மாநிலத்தில் உள்ள சில முக்கிய ஆறுகளில் வெள்ளம் கரைபுரண்டு ஓடுவதால், அணைகளை திறக்க அதிகாரிகள் முடிவு செய்துள்ளனர். இதை தொடர்ந்து 8 மாவட்டங்களில் கனமழை முதல் மிக கனமழை பெய்யும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் ஆரஞ்சு எச்சரிக்கை விடுத்துள்ளது.
‘ஆரஞ்சு’ அலர்ட்:
இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் கனமழை வெளுத்து வாங்குகிறது. அதாவது, உத்தரபிரதேசம், கேரளா, மகாராஷ்டிரா, தெலுங்கானா போன்ற மாநிலங்களில் மிக அதிக கனமழை பெய்து வருகிறது. மேலும், பல்வேறு மாநிலங்களில் கூடுதல் கனமழையால் நிலச்சரிவு மற்றும் திடீர் வெள்ளம் ஏற்பட்டு மக்கள் அவதிப்பட்டு வருகின்றனர். அந்த வகையில் மத்தியப் பிரதேசத்தில் எட்டு மாவட்டங்களில் கனமழை முதல் மிகக் கனமழை பெய்யும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் (ஐஎம்டி) நேற்று ஆரஞ்சு எச்சரிக்கை விடுத்துள்ளது.
Exams Daily Mobile App Download
கடந்த இரண்டு நாட்களாக பெய்து வரும் மழையின் காரணமாக மாநிலத்தில் உள்ள சில முக்கிய ஆறுகளில் வெள்ளம் கரைபுரண்டு ஓடுவதால், சில முக்கிய அணைகளை திறக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுத்துள்ளனர். மேலும் போபால், ரைசென், ராஜ்கர், செஹோர், விதிஷா, குணா, அகர் மால்வா மற்றும் ஷாஜாபூர் மாவட்டங்களில் தனிமைப்படுத்தப்பட்ட இடங்களில் 115.6 மிமீ அல்லது அதற்கு மேல் கனமழை முதல் மிக கனமழை வரை இருக்கும் என்று IMD கணித்து, ஆரஞ்சு எச்சரிக்கை விடுத்துள்ளது. மேலும் போபால், ஜபல்பூர், நர்மதா புரம், குவாலியர், சம்பல், ரேவா மற்றும் சாகர் ஆகிய ஏழு பிரிவுகளின் தனிமைப்படுத்தப்பட்ட இடங்களில் இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என IMD மஞ்சள் எச்சரிக்கை விடுத்துள்ளது.
தமிழக Post Office ல் ஆயுள் காப்பீட்டு முகவர் காலிப்பணியிடங்கள் – விண்ணப்பங்கள் வரவேற்பு!
மாநிலத்தின் முக்கிய நதிகளான நர்மதா நதி, பார்வதி, பெட்வா மற்றும் வேறு சில நீர்நிலைகள் நிரம்பி வழிகின்றன என்று மாநில நீர்வளத் துறையின் செயல் பொறியாளர் கமலேஷ் ராய்க்வார் கூறியுள்ளார். மேலும் IMD தகவலின் படி, காலை 8.30 மணியுடன் முடிவடைந்த கடந்த 24 மணி நேரத்தில், நர்மதா புரம், நரசிங்பூர், மலைப்பகுதியான பச்மாரி, சத்தர்பூரில் உள்ள நவ்கான் மற்றும் போபால் ஆகிய இடங்களில் 60.0 மிமீ, 64.0 மிமீ, 51.0 மிமீ, 47.4 மிமீ மற்றும் 46.3 மிமீ மழை பதிவாகியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.