தமிழக Post Office ல் ஆயுள் காப்பீட்டு முகவர் காலிப்பணியிடங்கள் – விண்ணப்பங்கள் வரவேற்பு!
தமிழகத்தில் அஞ்சலக ஆயுள் காப்பீட்டுப் பத்திரங்களை விற்பனை செய்ய நேரடி முகவர்கள் நியமிக்கப்பட இருக்கின்றனர். இந்த பணிக்கு விண்ணப்பிக்க வருகிற 26 ஆம் தேதிக்கு முன் விண்ணப்பிக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
வேலைவாய்ப்பு அறிவிப்பு:
தமிழகத்தில் சென்னை மாவட்டத்தில் உள்ள அஞ்சல் அலுவலங்களில் அஞ்சலக ஆயுள் காப்பீட்டுப் பத்திரங்களை விற்பனை செய்ய நேரடி முகவர்கள் நியமிக்கப்பட இருக்கின்றனர். இந்த பணிக்கு விண்ணப்பிக்க விருப்பமும் தகுதியும் உள்ள விண்ணப்பதாரர்கள் பெயர், முகவரி, தொடர்பு எண், கல்வித் தகுதி, வயது, முகவரி ஆகிய சான்றிதழ்களுடன் வருகிற ஜூலை 26 ஆம் தேதி அல்லது அதற்கு முன்னதாக [email protected] என்ற மின்னஞ்சல் முகவரியில் விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
Exams Daily Mobile App Download
இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கத் தகுதியான விண்ணப்பதார்கள் குறைந்தபட்சம் 10 ஆம் வகுப்பு படித்திருக்க வேண்டும். மேலும் விண்ணப்பதாரர்களின் வயது 18 முதல் 50 வரை இருக்க வேண்டும். இந்த பணியில் படித்து முடித்து வேலைவாய்ப்பு இல்லாத, சுயவேலை செய்யும் இளைஞர்கள், முன்னாள் ராணுவத்தினர், அங்கன்வாடி ஊழியர்கள், மகிளா மண்டல ஊழியர்கள், ஓய்வுபெற்ற பள்ளி ஆசிரியர்கள், காப்பீட்டு பத்திரங்கள் விற்பனையில் அனுபவம் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தியாவில் தொடர்ந்து அதிகரிக்கும் குரங்கு அம்மை தொற்று – அதிர்ச்சியில் மக்கள்!
மேலும் காப்பீட்டு பத்திரங்கள் விற்பனையில் அனுபவம், கணினி அறிவு, உள்ளூர் பற்றிய அறிவுத் திறன் ஆகியவை கூடுதல் தகுதிகளாக கணக்கிடப்படும். மேலும் இந்த பணிக்கு மற்ற காப்பீட்டு நிறுவனங்களில் ஆயுள் காப்பீட்டு பத்திரங்களை விற்பனை செய்பவர்கள் விண்ணப்பிக்க முடியாது. இந்த பணிக்கு வருகிற 28 ஆம் தேதி காலை 10 மணிக்கு சென்னை வடபழனி அஞ்சலகத்தில் நேர்முகத் தேர்வு நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
I want job
Please