அரசுப் பணியாளர் தேர்வுகள் ஜூன் 28 முதல் தொடக்கம் – OPSC அறிவிப்பு!!
ஒடிசா மாநிலத்தில் கொரோனா தொற்று காரணமாக தள்ளிவைக்கப்பட்டிருந்த அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் தேர்வுகள் ஜூன் 28 ம் தேதி முதல் நடத்துவதற்கு அரசு அட்டவணை வெளியிட்டுள்ளது.
தள்ளிவைக்கப்பட்ட தேர்வுகள்:
கொரோனா பரவல் அச்சம் காரணமாக ஒடிசா மாநிலத்தில் மே 5ம் தேதி முதல் 19ம் தேதி வரை திட்டமிடப்பட்டிருந்த ஒடிசா அரசுப் பணியாளர் தேர்வுகள் (OPSC) மறு அறிவிப்பு வரும் வரை தள்ளிவைக்கப்படுவதாகவும், திருத்தப்பட்ட தேதிகள் விரைவில் அறிவிக்கப்படும் என்றும் தேர்வுகள் ஆணையம் அறிவித்திருந்தது. தேர்வு குறித்த அரசின் அறிவிப்புகளை அறிந்து கொள்ள opsc.gov.in என்ற ஆணைக்குழுவின் அதிகாரபூர்வ வலைத்தளத்தை பார்வையிட விண்ணப்பதாரர்களுக்கு அறிவுறுத்தப்பட்டது.
TN Job “FB Group” Join Now
தற்போது தள்ளிவைக்கப்பட்டிருந்த தேர்வுகளை வரும் ஜூன் 28ம் தேதி முதல் நடத்த ஆணையம் திட்டமிட்டுள்ளது. ஜூனியர் அசிஸ்டென்ட் ஆரம்ப நிலை சோதனை, உதவி அறிவியல் அதிகாரி முதன்மை தேர்வு, ஒருங்கிணைந்த போலீஸ் சேவை பிரதான தேர்வு 2018 மற்றும் 2017, உணவு பாதுகாப்பு அதிகாரி 2019, ஜூனியர் இன்ஜினியர் தேர்வு 2019 போன்ற தேர்வுகளுக்கான தேதிகள் வெளியிடப்பட்டுள்ளது.
செப்டம்பர் முதல் வாரத்தில் 3 நாட்கள் அலுவலகம் செயல்படும் – ஆப்பிள் நிறுவனம் அறிவிப்பு!!
2021 ஜூன் மாதத்தில் நடத்தப்படவுள்ள குறிப்பிட்ட பணிகளுக்கான தேர்வுகள் தற்காலிகமாக திட்டமிடப்பட்டுள்ளது. கொரோனா தொற்றின் நிலைமையைப் பொறுத்து தேர்வு அட்டவணைகள் மாற்றப்படுவதற்கு வாய்ப்புகள் உள்ளது என்று OPSC தெரிவித்துள்ளது.