செப்டம்பர் முதல் வாரத்தில் 3 நாட்கள் அலுவலகம் செயல்படும் – ஆப்பிள் நிறுவனம் அறிவிப்பு!!
புகழ்பெற்ற முன்னணி தொழில்நுட்ப நிறுவனமான ஆப்பிள், தனது ஊழியர்கள் அலுவலகம் வருவதற்கு அழைப்பு விடுத்துள்ளது. அதாவது ஆப்பிள் பணியாளர்கள் அனைவரும் செப்டம்பர் மாதம் முதல் ஒவ்வொரு வாரமும் 3 நாட்களில் அலுவலகம் வர வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
அலுவலகம் திறப்பு:
உலகம் முழுவதும் தொழில்நுட்ப சேவைகளை உயர்த்தி செல்லும் நோக்கில், ஆப்பிள் நிறுவனத்தின் தலைமையகம் மீண்டுமாக திறக்கப்பட உள்ளதாக அந்நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி (CEO) டிம் குக் தெரிவித்துள்ளார். அந்த வகையில் ஆப்பிள் நிறுவனத்தின் பெரும்பாலான தொழிலாளர்கள் திங்கள், செவ்வாய் மற்றும் வியாழக்கிழமைகளில் அலுவலகத்திற்கு வருமாறும், புதன் மற்றும் வெள்ளிக்கிழமைகளில் வீடுகளில் இருந்து பணியாற்றும் படி அனுமதி கொடுக்கப்பட்டுள்ளது.
TN Job “FB Group” Join Now
மேலும், ஆப்பிள் நிறுவனத்தில் ஊழியர்கள் செய்வதற்கு வேலைகள் அதிகம் இருப்பதாகவும், கடந்த ஆண்டிலிருந்து ஊழியர்கள் அனைவரும் வீடுகளில் இருந்து வேலை பார்ப்பதால் இவை தடைபட்டதாகவும் CEO டிம் குக், ஊழியர்களுக்கு அனுப்பியுள்ள மின்னஞ்சலில் தெரிவித்துள்ளார். இதற்கு முன்னதாக ஆப்பிள் நிறுவனத்தில் பணியாற்றும் ஊழியர்கள் ஓரு ஆண்டுக்கு இரண்டு வாரங்கள் வரை வீடுகளில் இருந்து பணிபுரியும் வாய்ப்பையும் அந்நிறுவனம் வழங்கி வருவது குறிப்பிடத்தக்கது.
தமிழகத்தில் தடையில்லா மின்சாரம் விநியோகம் – அமைச்சர் அறிவிப்பு!!
இதை தொடர்ந்து ஆப்பிள் நிறுவனத்தில் பணிபுரியும் அனைத்து ஊழியர்களும் தடுப்பூசி போட்டுக்கொள்ளுமாறும் டிம் குக் வலியுறுத்தியுள்ளார். இது தவிர மைக்ரோசாப்ட் நிறுவனம் செப்டம்பர் மாதத்துக்கு மேல் தனது அலுவலகங்களை மீண்டும் திறப்பதாக கூறியுள்ளது. அதே போல் கொரோனா தொற்று காரணமாக பேஸ்புக் மற்றும் கூகுள் போன்ற பிற தொழில்நுட்ப நிறுவனங்களும் தனது ஊழியர்களை வீட்டிலிருந்து வேலை செய்ய அனுமதித்துள்ளது குறிப்பிடத்தக்கது.