தமிழகத்தில் கடைகள் திறப்பு, அரசு அலுவலகங்களுக்கு அனுமதி? முதல்வர் ஆலோசனை!
தமிழகத்தில் வருகின்ற ஜூன் 7ம் தேதி காலை 6 மணியுடன் தளர்வுகளற்ற முழு ஊரடங்கு கட்டுப்பாடுகள் முடிவுக்கு வரும் நிலையில் இது குறித்து தமிழக முதல்வர் ஸ்டாலின் அவர்கள் முக்கிய ஆலோசனையை தற்போது மேற்கொண்டு வருகிறார்.
ஊரடங்கு தளர்வுகள்:
தமிழகத்தில் கொரோனாவின் இரண்டாம் அலையில் இருந்து மக்களை பாதுகாக்கும் வகையில் கடந்த மே மாதம் 10ம் தேதி முதல் ஊரடங்கு கட்டுப்பாடுகள் அமலில் இருந்து வருகிறது. மேலும் கடந்த 24ம் தேதி முதல் ஊரடங்கு கடுமையாக்கப்பட்டு தளர்வுகள் இன்றி அமல்படுத்தப்பட்டது. இந்நிலையில் வருகின்ற ஜூன் மாதம் 7ம் தேதி காலை 6 மணிக்கு ஊரடங்கு கட்டுப்பாடுகள் முடிவுக்கு வரவுள்ளதால் தமிழக முதல்வர் ஸ்டாலின் அவர்கள் சுகாதாரத்துறை அதிகாரிகளுடன் ஆலோசனை மேற்கொண்டு வருகிறார்.
TN Job “FB Group” Join Now
இந்த ஆலோசனை கூட்டத்தில் தலைமை செயலாளர், சுகாதாரத்துறை செயலாளர் மற்றும் டிஜிபி உள்ளிட்ட அதிகாரிகள் பங்கேற்றுள்ளனர். தமிழகத்தில் கடந்த சில நாட்களாகவே பல மாவட்டங்களில் கொரோனா பாதிப்பு குறைந்து வருவதன் காரணமாக அந்த மாவட்டங்களுக்கு மட்டும் தளர்வுகள் அளிக்கப்படலாம் என்று கூறப்படுகிறது. ஏற்கனவே சில தினங்களுக்கு முன்பு இது குறித்து ஆலோசனை மேற்கொள்ளப்பட்டது.
தமிழக அரசு துறைகளுக்கு முக்கிய அறிவிப்பு – தலைமை செயலாளர் சுற்றறிக்கை!!
தற்போது நடைபெற்று வரும் கூட்டத்தில் பாதிப்புகள் அதிகமாக காணப்படும் மாவட்டங்களுக்கு தளர்வுகளற்ற ஊரடங்கினை நீட்டித்தும், பாதிப்பு குறைந்து வரும் மாவட்டங்களுக்கு சில தளர்வுகள், அதாவது மளிகை கடைகள் திறக்க நேரம் நீட்டிப்பு பத்திரப்பதிவு உள்ளிட்ட அரசு அலுவலகங்களுக்கு அனுமதி போன்ற தளர்வுகள் அளிக்கப்படலாம் என கூறப்படுகிறது. இந்த கூட்டம் முடிவுக்கு வந்த பின்பு தமிழகத்தில் ஊரடங்கு நீட்டிக்கப்படுமா அல்லது தளர்வுகள் அளிக்கப்படுமா என்பது குறித்த முறையான அறிவிப்பு இன்று மாலை வெளிவரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.