தமிழக அரசு துறைகளுக்கு முக்கிய அறிவிப்பு – தலைமை செயலாளர் சுற்றறிக்கை!!
தமிழகத்தில் உள்ள அனைத்து அரசு துறைகளிலும் தமிழ் யூனிகோட் முறையை கையாள வேண்டும் என்று தமிழக தலைமை செயலாளர் இறையன்பு அவர்கள் தெரிவித்துள்ளார்.
தமிழ் யூனிகோட்:
தமிழகத்தில் கொரோனாவின் இரண்டாம் அலையின் தீவிரம் காரணமாக தற்போது தளர்வுகளற்ற முழு ஊரடங்கு கட்டுப்பாடுகள் அமலில் இருந்து வருகிறது. இந்த ஊரடங்கு வருகின்ற ஜூன் 7ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டு உள்ளது. இந்நிலையில் தமிழகத்தில் தலைமை செயலாளரான இறையன்பு அவர்கள் அரசு துறைகளுக்கு ஓர் அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.
TN Job “FB Group” Join Now
அவர் கூறியதாவது, தமிழகத்தில் அனைத்து அரசு துறைகளிலும் யூனிகோட் முறையை கையாள வேண்டும் என்றும் இதனை பயன்படுத்துவதில் சிரமம் இருக்காது என்றும் அவர் தெரிவித்தார். இது குறித்து வெளியிடப்பட்டு உள்ள சுற்றறிக்கையில், தமிழக இணைய கல்வி கழகம் மேம்படுத்தியுள்ள தமிழ் யூனிகோட் வகை தமிழ் குறி அமைவு (1ACE16) கொண்ட எழுத்துருக்கள், செதுகைகள் ஆகியவற்றிற்கு தமிழக தொழில் நுட்பத்துறை ஆணை 5ன் படி அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
கண்ணம்மாவை முழு மனதாக ஏற்றுக்கொள்ளும் பாரதி – அனல் பறக்கும் கதைக்களம்!
மேலும் தகவல் தொழில் நுட்பத்துறையில் கடிதம் எண் 3973ன் படி அனைத்து துறை செயலாளர்கள், துறை தலைவர்கள் ஆகியோர் வானவில் அவ்வையார் எழுத்துருக்களுக்கு பதிலாக மேற்கண்ட தமிழ் யூனிகோட் எழுத்துருவை பயன்படுத்தலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இதனை அரசு துறைகளில் தினசரி பயன்படுத்துவதாக கூறப்படுகிறது. டிவிஏ மேம்படுத்தியுள்ள யூனிகோட் மாற்றி அமைக்கும் கருவி தமிழ் எழுத்துரு ஆகியவை htip/www.lamivi.org என தலத்தில் இலவசமாக கிடைக்க ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது என்றும் கூறப்பட்டுள்ளது.
Velaivaippu Seithigal 2021
To Subscribe => Youtube Channel கிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebook கிளக் செய்யவும்
To Join => Telegram Channel கிளிக் செய்யவும்