மாநிலம் முழுவதும் பள்ளி, கல்லூரிகள் திறப்பு? அரசுக்கு பரிந்துரை!
கர்நாடகா மாநிலத்தில் பள்ளி மற்றும் கல்லூரிகளை படிப்படியாக திறக்கலாம் என்று மருத்துவ நிபுணர் குழு மாநில அரசுக்கு பரிந்துரைத்துள்ளது. இது குறித்து மருத்துவ நிபுணர் குழு 92 பக்கங்கள் அடங்கிய இடைக்கால அறிக்கையை மாநில முதல்வர் எடியூரப்பா அவர்களிடம் தாக்கல் செய்துள்ளனர்.
பள்ளி, கல்லூரிகள் திறப்பு:
நாடு முழுவதும் கொரோனா அச்சம் காரணமாக மாணவர்கள் நலன் கருதி பெரும்பாலும் கல்வி நிறுவனங்கள் அனைத்தும் மூடப்பட்டு வருகிறது. அந்த வகையில் கடந்த சில மாதங்களாகவே கர்நாடகா மாநிலத்தில் பள்ளி மற்றும் கல்லூரிகள் மூடிய நிலையில் உள்ளன. இந்நிலையில் தற்போது மாநிலத்தில் கொரோனா வைரஸின் தாக்கம் வெகுவாக குறைந்து வருகிறது. ஆனால் கொரோனா வைரஸ் தொற்று மூன்றாவது அலையாக உருவெடுக்கும் என்று மத்திய அரசு ஏற்கனவே எச்சரிக்கை விடுத்திருந்தது.
VI சிம் பயனர்களுக்கு சூப்பர் அறிவிப்பு – ரூ.75 ரீசார்ஜ் திட்டம்!
இக்காலகட்டத்தில் பள்ளி மற்றும் கல்லூரிகளை திறப்பதில் மாநில அரசுகள் தயக்கம் காட்டி வருகிறது. இந்நிலையில் மூன்றாவது அலை குறித்து வழிகாட்டல்களை வழங்க மாநில அரசு மருத்துவ நிபுணர் குழுவை அமைத்து உத்தரவிட்டது கர்நாடகா அரசு. அரசால் அமைக்கப்பட்ட மருத்துவ நிபுணர் குழு ஆலோசனை மேற்கொண்டு தற்போது மாநில முதல்வர் எடியூரப்பா அவர்களிடம் 92 பக்கங்கள் அடங்கிய இடைக்கால அறிக்கையை தாக்கல் செய்துள்ளனர்.
TN Job “FB Group” Join Now
அந்த அறிக்கையில், மாநிலத்தில் படிப்படியாக பள்ளி, கல்லூரிகள் திறக்கலாம் என்று பரிந்துரை செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே மாணவர்கள் பல மாதங்களாக தங்கள் கல்வி பயிலும் காலத்தை இழந்துள்ளனர் என்று சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. இந்நிலையில் பள்ளி, கல்லூரிகள் திறப்பை தள்ளிப்போடுவது குழந்தை தொழிலாளர், பால்ய திருமணம் போன்ற குற்றங்கள் அதிகரிக்கும் அபாயம் ஏற்படும் என்றும் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.