ஷாக் தகவல்! அதிரடியாக மூடப்படும் ஆன்லைன் ஷாப்பிங் நிறுவனங்கள் – நிலைகுலைந்து நிற்கும் மக்கள்!

0
ஷாக் தகவல்! அதிரடியாக மூடப்படும் ஆன்லைன் ஷாப்பிங் நிறுவனங்கள் - நிலைகுலைந்து நிற்கும் மக்கள்!
ஷாக் தகவல்! அதிரடியாக மூடப்படும் ஆன்லைன் ஷாப்பிங் நிறுவனங்கள் - நிலைகுலைந்து நிற்கும் மக்கள்!
ஷாக் தகவல்! அதிரடியாக மூடப்படும் ஆன்லைன் ஷாப்பிங் நிறுவனங்கள் – நிலைகுலைந்து நிற்கும் மக்கள்!

உலகிலேயே மகிழ்ச்சி இல்லாத நாடுகளில் ஒன்றான ஆப்கானிஸ்தானில் தற்போது தாலிபான்கள் ஆட்சி நடைபெறுகிறது. அதனால் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடி காரணமாக, 2 முக்கிய ஆன்லைன் ஷாப்பிங் சேவைகள் தங்களுடைய சேவையை நிறுத்துவதாக அறிவித்துள்ளது.

ஆன்லைன் சேவைகள் நிறுத்தம்:

ஆப்கானிஸ்தானை கடந்த ஆண்டு தாலிபான்கள் கைப்பற்றினார்கள். தாலிபான்கள் ஆட்சியை பெற்றது முதல் ஏகப்பட்ட மாற்றங்கள் வந்துள்ளது. மேலும் நாடு முழுவதும் ஏகப்பட்ட நிதி நெருக்கடியை சந்தித்துள்ளது. அதனால் ஆப்கானிஸ்தானில் பயன்பாட்டில் இருந்த முக்கிய ஆன்லைன் ஷாப்பிங் சேவையான கிளிக்.எப் நிறுவனம் தன்னுடைய சேவையை நிறுத்துவதாக அறிவித்துள்ளது. இந்த நிறுவனம் சுமார் 6 ஆண்டுகளாக வணிகம் செய்த நிலையில் தற்போது அதிகமான பொருளாதார நெருக்கடி காரணமாக தற்போது இந்த முடிவுக்கு வந்துள்ளது.

மேலும் இந்த ஆன்லைன் வணிக நிறுவனத்தை தொடர்ந்து மூன்று ஆண்டுகளாகப் பயன்பாட்டில் இருந்த பாகால் என்ற ஆன்லைன் ஷாப்பிங் சேவை நிறுவனமும் பொருளாதார நெருக்கடியை காரணம் காட்டி தன்னுடைய சேவையை நிறுத்தி இருக்கிறது. இது குறித்த அறிவிப்பை இந்த இரு நிறுவனமும் தங்களது முகநூல் பக்கத்தில் வெளியிட்டுள்ளது. இந்த திடீர் அறிவிப்பு குறித்து ஊடகங்கள் கூறுகையில், தாலிபானின் புதிய கட்டுப்பாட்டால் மக்கள் பொருள்கள் வாங்கும் அளவு குறைந்ததும், வங்கிகள் மக்களின் பணத்தை நிலுவையில் வைத்துள்ளதும் தான் காரணம் என தெரிவித்துள்ளது.

உடனே சேருங்க.. Post Office-ன் அசத்தல் சேமிப்பு திட்டம் – வட்டியோட முழுசா 14 லட்சம் கையில கிடைக்கும்!

Exams Daily Mobile App Download

இந்த இரு ஆன்லைன் வணிக நிறுவனத்தை தொடர்ந்து, ஆன்லைன் டாக்ஸி செயலியான பூபர் என்ற நிறுவனமும் இந்துகோஷ் என்ற ஆன்லைன் ஷாப்பிங் வெப்சைடும் மூடப்பட இருப்பதாக தெரிவித்துள்ளது. அது மட்டுமில்லாமல் இன்னும் பல ஆன்லைன் ஷாப்பிங் நிறுவனங்கள் நிதி நெருக்கடி காரணமாக மூடப்பட வாய்ப்புள்ளதாக தெரிகிறது. மனித உரிமை மீறல், மனதளவில் துன்புறுத்துதல், வேலையின்மை, வறுமை போன்றவை காரணமாக தான் இந்த நிலைமை ஏற்பட்டுள்ளதாக தாலிபான்கள் மீது புகார் வைக்கப்பட்ட நிலையில், அதற்கு தாலிபான் அரசு மறுப்பு தெரிவித்துள்ளது. தற்போது வெளியான தகவலின்படி சுமார் 25 மில்லியன் மக்கள் ஆப்கானிஸ்தானில் வறுமையில் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!