தமிழகத்தில் களைகட்டும் தீபாவளி பண்டிகை – அரசு பேருந்திற்கு 7 ஆயிரம் பேர் முன்பதிவு!

0
தமிழகத்தில் களைகட்டும் தீபாவளி பண்டிகை - அரசு பேருந்திற்கு 7 ஆயிரம் பேர் முன்பதிவு!
தமிழகத்தில் களைகட்டும் தீபாவளி பண்டிகை - அரசு பேருந்திற்கு 7 ஆயிரம் பேர் முன்பதிவு!
தமிழகத்தில் களைகட்டும் தீபாவளி பண்டிகை – அரசு பேருந்திற்கு 7 ஆயிரம் பேர் முன்பதிவு!

தமிழகத்தில் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு அரசு சிறப்பு விரைவுப் பேருந்துகளில் முன்பதிவு தொடங்கப்பட்டுள்ளது. இதுவரை 7 ஆயிரம் பேர் முன்பதிவு செய்துள்ளதாக போக்குவரத்துத்துறை தகவல் வெளியிட்டுள்ளது.

தீபாவளி பண்டிகை:

நாடு முழுவதும் தீபாவளி பண்டிகை வரும் நவம்பர் 4ம் தேதி கொண்டாடப்பட உள்ளது. கடந்த ஆண்டு கொரோனா பரவலின் காரணமாக பண்டிகைகள் ஏதும் கொண்டாடப்படவில்லை. இந்த ஆண்டு நோய்த்தொற்று குறைந்துள்ள நிலையில் தீபாவளி பண்டிகையை கொண்டாடுவதற்கு மக்கள் நவம்பர் 4ம் தேதியை எதிர்பார்த்து காத்துக் கொண்டிருக்கின்றனர். தீபாவளி நாளில் பட்டாசு வெடித்தும், இனிப்பு பண்டங்கள் செய்தும் கொண்டாடுவர். பட்டாசு வெடிப்பதால் ஏற்படும் புகையினால் நுரையீரல் பாதிக்கப்பட்டவர்களும், கொரோனா பெருந்தொற்றில் இருந்து மீண்டு வந்தவர்களும் பெரிய விளைவினை சந்திக்க நேரிடும். மேலும் சுற்றுச்சூழல் மாசுபாடு அடையும் என்பதற்காகவும், தமிழக அரசு தீபாவளி பண்டிகை அன்று காலை 1 மணி நேரமும், மாலை 1 மணி நேரமும் மட்டுமே பட்டாசு வெடிக்க வேண்டும் என்று உத்தரவு பிறப்பித்தது.

தமிழகத்தில் அக்.31க்கு பிறகு ஊரடங்கு நீட்டிப்பு? முதல்வர் நாளை ஆலோசனை!

மேலும் தற்போது பண்டிகைகள் அடுத்தடுத்து வரவிருப்பதால் கொரோனா பரவலை தடுக்கும் விதமாக பண்டிகை நாட்களில் தேவைப்பட்டால் 144 தடை உத்தரவு பிறப்பித்து கொள்ளலாம் என்று மத்திய அரசு மாநில அரசுக்கு உத்தரவிட்டுள்ளது. இந்நிலையில் சொந்த ஊரிலிருந்து வெளியூர்களுக்கு சென்று வேலை பார்க்கும் மக்கள் தங்கள் சொந்த ஊர்களுக்கு சென்று பண்டிகையை கொண்டாடுவது வழக்கம். அதனால் தீபாவளி பண்டிகை முன்னிட்டு தமிழ்நாடு போக்குவரத்து கழகம் மக்களின் நலன் கருதி 832 அரசு விரைவுப் பேருந்துகளுக்கு முன்பதிவு நடைபெற்று வருகிறது. www.tnstc.in என்ற இணையதளத்திற்கு சென்று முன்பதிவு மேற்கொள்ளலாம். இதுவரையில் 7 ஆயிரம் பேர் முன்பதிவு செய்துள்ளதாக அரசு விரைவுப் போக்குவரத்து கழக இயக்குநர் தகவல் தெரிவித்துள்ளார்.

SBI வங்கியில் குறைந்த வட்டி விகிதத்தில் வீட்டுக்கடன் – எப்படி பெறுவது? எளிய வழிமுறைகள்!

இதில் நவம்பர் 4ம் தேதி தீபாவளி பண்டிகை வருவதால் நவ.2ம் தேதி பயணம் செய்ய 4 ஆயிரம் பேரும், 3 ஆம் தேதி பயணம் செய்ய 3 ஆயிரம் பேரும் முன்பதிவு செய்துள்ளதாகவும் அவர் விளக்கியுள்ளார். மேலும் இணையதளத்தில் முன்பதிவு மேற்கொள்ளும் வசதி வந்தவுடன் கடந்த காலங்களை போல கவுண்டர்களில் நேரடியாக சென்று டிக்கெட் எடுப்பது குறைந்து வருகிறது. கோயம்பேடு உள்ளிட்ட பல பகுதிகளில் சிறப்பு கவுண்டர்கள் திறக்கப்பட்டாலும் அங்கு நேரில் வந்து டிக்கெட் வாங்குபவர்களின் எண்ணிக்கை குறைவாகவே உள்ளது என்றும் தகவல் வெளியாகியுள்ளது.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!