தமிழகத்தில் அக்.31க்கு பிறகு ஊரடங்கு நீட்டிப்பு? முதல்வர் நாளை ஆலோசனை!
தமிழகத்தில் அக்டோபர் 31ம் தேதி வரை ஊரடங்கு கட்டுப்பாடுகள் நீட்டிக்கப்பட்டு உள்ள நிலையில், கூடுதல் தளர்வுகள் அளிக்கப்படுவது குறித்து முதல்வர் முக ஸ்டாலின் நாளை ஆலோசனை நடத்த உள்ளார்.
கூடுதல் தளர்வுகள்:
தமிழகத்தில் கொரோனா 2ம் அலையின் பாதிப்புகள் காரணமாக கடந்த மே 10ம் தேதி முதல் ஊரடங்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டது. தொடர்ந்து நோய் பரவல் அபாயம் குறைந்து வந்ததால் அரசு படிப்படியாக பல கட்டங்களாக ஊரடங்கில் தளர்வுகளை அளித்து வந்தது. இந்நிலையில் இறுதியாக அக்டோபர் 31ம் தேதி வரை ஊரடங்கு கட்டுப்பாடுகள் நீடிக்கப்படுவதாக செப்டம்பர் மாத தொடக்கத்தில் தமிழக அரசு அறிவித்தது. மேலும், எதிர்வரும் பண்டிகை காலங்களில் கடைபிடிக்க வேண்டிய விதிமுறைகள் மற்றும் தளர்வுகள் குறித்து அறிவுறுத்தப்பட்டது.
SBI வங்கியில் குறைந்த வட்டி விகிதத்தில் வீட்டுக்கடன் – எப்படி பெறுவது? எளிய வழிமுறைகள்!
தமிழகத்தில் கொரோனா தொற்றின் பாதிப்புகள் குறைந்துள்ளதால் முதல் கட்டமாக கடந்த மாதம் 9 முதல் 12ம் வகுப்பு மாணவர்களுக்கு பள்ளிகள் திறக்கப்பட்டு செயல்பட்டு வரும் நிலையில், வரும் நவம்பர் 1ம் தேதி 1 முதல் 8ம் வகுப்பு மாணவர்களுக்கு பள்ளிகள் திறக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. மேலும், தமிழகத்தில் தினசரி பாதிப்பு கடந்த 10 நாட்களுக்கு முன்னர் திடீரென்று அதிகரித்து வந்தது. ஆனால் தமிழக அரசின் தீவிர நடவடிக்கையின் காரணமாக கடந்த நாட்களில் பாதிப்பு மிகவும் குறைந்த எண்ணிக்கையில் மட்டுமே பதிவாகி வருகிறது.
தமிழகத்தில் புதிதாக 10,000 இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு – முதல்வர் சூப்பர் அறிவிப்பு!
கொரோனா பாதிப்பு குறைவதற்கு அரசு நடத்தி வரும் மெகா கொரோனா தடுப்பூசி முகாம்கள் முக்கிய காரணமாக உள்ளது. இதனால் தமிழகத்தில் அரசு விதித்துள்ள கொரோனா ஊரடங்கு கட்டுப்பாடுகளில் கூடுதல் தளர்வுகளை அளிப்பது குறித்து தமிழக முதல்வர் முக ஸ்டாலின் நாளை சென்னையில் உள்ள தலைமை செயலகத்தில் ஆலோசனை நடத்த இருக்கிறார். இந்த ஆலோசனை கூட்டத்தில் முதல்வருடன் தலைமை செயலர், மருத்துவத்துறை செயலர் மற்றும் துறை ரீதியான அதிகாரிகள் பங்கேற்க உள்ளனர். மேலும் பண்டிகை தினங்களில் கோவில்கள் திறப்பது குறித்தும் ஆலோசிக்கப்பட உள்ளது.