தமிழகத்தில் ரேஷன் கடைகள் திறப்பு பற்றி ஆன்லைன் மூலம் தகவல் – புதிய வசதி அறிமுகம்!

0
தமிழகத்தில் ரேஷன் கடைகள் திறப்பு பற்றி ஆன்லைன் மூலம் தகவல் - புதிய வசதி அறிமுகம்!
தமிழகத்தில் ரேஷன் கடைகள் திறப்பு பற்றி ஆன்லைன் மூலம் தகவல் - புதிய வசதி அறிமுகம்!

தமிழகத்தில் ரேஷன் கடைகள் திறப்பு பற்றி ஆன்லைன் மூலம் தகவல் – புதிய வசதி அறிமுகம்!

தமிழகத்தில் ரேஷன் கடைகள் மூலம், சாமானிய மக்களுக்கு மலிவு விலையில் உணவு பொருட்கள் வழங்கப்பட்டு வருகின்றன. இந்நிலையில் தமிழக அரசு ரேஷன் அட்டைதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. மேலும் இந்த திட்டமானது மக்களிடையே நல்ல வரவேற்பை பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது

புதிய திட்டம்:

தமிழகத்தில் வறுமை கோட்டிற்கு கீழ் உள்ள மக்களுக்கு உதவும் விதமாக தமிழக அரசு சார்பில் ரேஷன் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இந்த திட்டத்தின் கீழ் பல கோடி மக்கள் பயன் பெற்று வருகின்றனர். மேலும் கொரோனா காலத்தில் மக்களுக்கு இலவச ரேஷன் பொருட்கள் வழங்கியது குறிப்பிடத்தக்கது. அதுமட்டுமல்லாமல் ஒவ்வொரு அட்டைதாரர்களுக்கும் ரூ.1000 கொரோனா கால உதவி தொகையாக வழங்கப்பட்டது. மத்திய அரசின் உதவிகளும் ரேஷன் கார்டு மூலம் கிடைக்கிறது. இந்தியாவில் ரேஷன் கடைகளில் தொடர்ந்து ஊழல்கள் நடைபெற்று வருவதாக புகார்கள் எழுந்து வருகின்றன. இதனை கட்டுப்படுத்த தமிழக அரசின் சார்பில் தனிப்படை அமைக்கப்பட்டு தீவிர சோதனை நடைபெற்று வருகிறது. மேலும் ரேஷன் பொருட்கள் குறித்து புகார்களை மக்கள் தெரிவிக்கும் விதமாக அரசு சார்பில் ஹெல்ப் லைன் வசதிகளும் செய்யப்பட்டுள்ளன.

Exams Daily Mobile App Download

தற்போது அனைத்து ரேஷன் கடைகளிலும் சிசிடிவி கேமரா பொருத்தும் திட்டம் அறிமுகப்படுத்தப்பட உள்ளது. இதன் மூலமாக ரேஷன் கடைகளில் நடக்கும் ஊழல்களை எளிதில் கண்டுபிடிக்க முடியும். இன்றைய உலகில் தொழில்நுட்பத்தின் வளர்ச்சி மக்களுக்கு நன்மை செய்வதோடு மக்களை தொழில்நுட்ப அடிமைகளாகவும் மாற்றியுள்ளது. அதாவது அனைத்து வேலைகளையும் மக்கள் வீட்டில் இருந்து ஆண்ட்ராய்டு போன்கள் மூலம் செய்து வருகின்றனர். குறிப்பாக மின்சார கட்டணம், சொத்து வரி போனவற்றை ஆன்லைனில் செலுத்தும் சேவை அதிகமாகிவிட்டது. அந்த வகையில் ரேஷன் கடைகள் செயல்படுமா இல்லையா என்பதை மக்கள் வீட்டிலிருந்தபடியே தெரிந்து கொள்ள புதிய வசதி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. மேலும் இந்த புதிய வசதியினை எப்படி தெரிந்து கொள்வது என்று கீழே உள்ள படிநிலைகள் மூலம் தெரிந்து கொள்ளலாம்.

மத்திய அரசில் Stenographer காலிப்பணியிடங்கள் – 10 ஆம் வகுப்பு தேர்ச்சி போதும் !

1. உங்கள் ஊரில் ரேஷன் கடை திறந்துள்ளதா என தெரிந்து கொள்ள https://www.tnpds.gov.in/ என்ற இணையதளத்திற்கு செல்ல வேண்டும். அதன் பிறகு விநியோக திட்ட அறிக்கைகள் என்பதை கிளிக் செய்யவும்.

2. நீங்கள் எந்த மாவட்டத்தை சேர்ந்தவர், எந்த பகுதியை சேர்ந்தவர் என்பதை தேர்வு செய்யவும். பின்னர் உங்கள் ஊர் ரேஷன் கடை குறித்த தகவல்கள் காண்பிக்கப்படும். அதில் கடை திறந்து உள்ளது என்றால் ஆன்லைன் என்று பச்சை நிறத்திலும், அதுவே கடை மூடப்பட்டிருந்தால் ஆப்லைன் என்று சிவப்பு நிறத்திலும் குறிப்பிட்டு இருக்கும்.

3. ரேஷன் கடை இருப்பு நிலைகளை தெரிந்து பொருட்கள் இருப்பு நிலை என்பதை கிளிக் செய்து எந்த பொருட்கள் எவ்வளவு உள்ளது என்பது குறித்த விவரங்களை தெரிந்து கொள்ளலாம்.

4. மேலும் இந்த பக்கத்தில் புகார் என்பதை தேர்வு செய்யும் போது அந்த பகுதி மக்கள் செய்த புகார்கள் குறித்த விவரங்கள் தெரிய வரும். மேலும் புதிய ரேஷன் கார்டுக்கு விண்ணப்பிப்பது, புதிய பயனரை சேர்ப்பது, கார்டு டிரான்ஸ்பர் செய்வது போன்றவற்றையும் www.tnpds.gov.in இணையதளத்தில் செய்ய முடியும்.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!