தமிழகத்தில் பள்ளிகள் முழுவதுமாக மூடல், மீண்டும் ஆன்லைன் வகுப்புகள்? அரசுக்கு பரிந்துரை!

0
தமிழகத்தில் பள்ளிகள் முழுவதுமாக மூடல், மீண்டும் ஆன்லைன் வகுப்புகள்? அரசுக்கு பரிந்துரை!
தமிழகத்தில் பள்ளிகள் முழுவதுமாக மூடல், மீண்டும் ஆன்லைன் வகுப்புகள்? அரசுக்கு பரிந்துரை!
தமிழகத்தில் பள்ளிகள் முழுவதுமாக மூடல், மீண்டும் ஆன்லைன் வகுப்புகள்? அரசுக்கு பரிந்துரை!

தமிழகத்தில் உள்ள அனைத்து பள்ளிகளிலும் மீண்டும் ஆன்லைன் வகுப்புகளை துவங்க வேண்டும் என்றும் கல்லூரிகளில் சுழற்சி முறையில் வகுப்புகளை தொடர்வது குறித்து அரசுக்கு பரிந்துரை செய்யப்பட்டிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

ஆன்லைன் வகுப்புகள்

நாடு முழுவதும் கொரோனா 3ம் அலையின் தாக்கம் அதிகரித்து வரும் சூழலில் பல்வேறு மாநிலங்கள் தோறும் புதிய நோய் தடுப்பு கட்டுப்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டு வருகிறது. அந்த வகையில் தமிழகத்திலும் கொரோனா பரவல் மற்றும் ஒமிக்ரான் வைரஸின் புதிய பாதிப்புகள் எதிர்பாராதவிதமாக உயர்ந்து கொண்டு இருக்கிறது. இப்படி இருக்க கொரோனா வைரஸை கட்டுப்படுத்தும் விதத்தில் ஜனவரி 10ம் தேதி வரை தமிழகம் முழுவதும் புதிய கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது.

மாநில தொடக்கப்பள்ளி ஆசிரியர்களுக்கு 50% சம்பள உயர்வு – முதல்வர் அறிவிப்பு!

அதன் படி மக்கள் அதிகம் கூடும் இடங்களுக்கு சில தடைகளை விதித்துள்ள அரசாங்கம், ஜனவரி 10 வரை பள்ளிகளில் 1 முதல் 8 வரையுள்ள வகுப்புகளுக்கு மட்டும் விடுமுறை அளித்திருக்கிறது. இந்நிலையில் தமிழகத்தில் ஊரடங்கு கட்டுப்பாடுகளை தீவிரப்படுத்துவது குறித்து முதல்வர் முக ஸ்டாலின் தலைமையில் முக்கிய ஆலோசனை கூட்டம் நடைபெற்று வருகிறது. மருத்துவ வல்லுனர்களுடனான இந்த ஆலோசனை கூட்டத்தில் பள்ளி மற்றும் கல்லூரிகளில் புதிய கட்டுப்பாடுகளை அமல்படுத்துவது குறித்து ஆலோசிக்கப்பட்டு வருகிறது.

அந்த வகையில் தற்போது வெளிவந்துள்ள தகவலின் படி, தமிழகத்தில் மீண்டுமாக பள்ளி மாணவர்களுக்கு ஆன்லைன் மூலம் வகுப்புகளை நடத்தவும், கல்லூரி மாணவர்களுக்கு சுழற்சி முறையில் வகுப்புகளை நடத்தவும் அரசுக்கு பரிந்துரை செய்யப்பட்டுள்ளதாக தெரிகிறது. ஏனென்றால் பள்ளி மாணவர்களுக்கு இதுவரை கொரோனா தடுப்பூசிகள் செலுத்தப்படாததால், அம்மாணவர்கள் எளிதில் நோய் தொற்று தாக்கத்திற்கு ஆளாக வாய்ப்புள்ளதாக தெரிகிறது.

தமிழக அஞ்சல் துறையில் 10ம் வகுப்பு முடித்தவர்களுக்கு வேலைவாய்ப்பு – விண்ணப்பங்கள் வரவேற்பு!

அதனால் பள்ளி மாணவர்களின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு, மீண்டும் ஆன்லைன் வகுப்புகளை தொடர்வது குறித்து அரசு முக்கிய ஆலோசனையில் ஈடுபட்டுள்ளது. அதே போல கல்லூரிகளிலும் சுழற்சி முறையில் வகுப்புகளை நடத்த வேண்டும் என்று மருத்துவ மற்றும் சுகாதார வல்லுநர்கள் அரசுக்கு பரிந்துரைத்துள்ளனர். இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு இன்னும் ஒரு சில நாட்களில் வெளியாகலாம் என்று தகவல்கள் பெறப்பட்டுள்ளது.

Velaivaippu Seithigal 2022

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!