தமிழக அஞ்சல் துறையில் 10ம் வகுப்பு முடித்தவர்களுக்கு வேலைவாய்ப்பு – விண்ணப்பங்கள் வரவேற்பு!
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அஞ்சல் கோட்டத்தில் ஆயுள் காப்பீடு முகவர் பணிக்கு விண்ணப்பங்கள் வரவேற்பட்டு வருகிறது. 10ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள் இப்பணிக்கு விண்ணப்பிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
ஆயுள் காப்பீடு முகவர்:
தமிழகத்தில் அரசு ஊரடங்கில் தளர்வுகள் அளித்து வரும் மக்கள் மீண்டும் வேலைவாய்ப்புகளை தேடி வருகின்றனர். இவர்களுக்கு உதவும் வகையில் அரசு தனியார் வேலைவாய்ப்பு முகாம்களை நடத்த அனுமதி வழங்கியுள்ளது. இதையடுத்து அனைத்து மாவட்டங்களிலும் வேலைவாய்ப்பு முகாம்கள் நடத்தப்பட்டு வருகிறது. இந்த முகாம்களில் உள்ளூர் மற்றும் வெளியூரில் இருந்து நிறுவனங்கள் வந்து பங்கேற்று படித்த ஏராளமான இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பை வழங்கி வருகின்றனர். மேலும் TNPSC தேர்வாணையம் போட்டித்தேர்வுகள் குறித்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
Post Office இல் மாதம் ரூ.1500 முதலீட்டில் ரூ.35 லட்சம் வரை பலன் – சூப்பர் சேமிப்பு திட்டம் இதோ!
அதனை தொடர்ந்து அஞ்சல் துறையில் வேலைவாய்ப்புகளை வழங்க முன்வந்துள்ளது. அந்த வகையில் பல்வேறு மாவட்டங்களில் உள்ள அஞ்சலகங்களில் ஆயுள் காப்பீடு முகவர்கள் பணிக்கு ஆட்கள் தேர்வு நடைபெற்று வருகிறது. அந்த வகையில் தற்போது தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அஞ்சலகத்தில் ஆயுள் காப்பீடு முகவர் பணிகான விண்ணப்பங்கள் வரவேற்கப்பட்டு வருகிறது. 10ம் வகுப்பு தேர்ச்சி பெற்ற 18 வயது முதல் 50 வயதுக்கு உட்பட்டவர்கள் இப்பணிக்கு விண்ணப்பிக்கலாம். இப்பதவிக்கு பாலிசி பிரீமியம் அடிப்படையில் ஊக்கத்தொகை வழங்கப்படும்.
TCS நிறுவனத்தில் இன்ஜினியரிங் பட்டதாரிகளுக்கான வேலைவாய்ப்பு – முழு விவரம் இதோ!
ஆயுள் காப்பீடு முகவர் 5 ஆயிரம் ரூபாயை காப்பீடு தொகையை சேமிப்பு பத்திர வடிவில் தங்களுக்கு அருகில் உள்ள அஞ்சலகத்தில் செலுத்த வேண்டும். இந்த தொகை வட்டியுடன் சேர்த்து திரும்ப வழங்கப்படும். விண்ணப்பிக்க விரும்புவோர் விண்ணப்பங்களை பூர்த்தி செய்து ஜனவரி 27ம் தேதிக்குள் முதுநிலை அஞ்சல் கோட்ட கண்காணிப்பாளர் கோவில்பட்டி கோட்டம் – 628501 என்ற முகவரிக்கு பதிவஞ்சலில் அனுப்ப வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்த கூடுதல் விவரங்களுக்கு விவரங்களுக்கு 04632-220368 04636-222313, 04633-222329 ஆகிய எண்களை தொடர்பு கொள்ளலாம் என கோவில்பட்டி கோட்ட முதுநிலை அஞ்சல் கண்காணிப்பாளர் தெரிவித்துள்ளார்.
I like a job