தமிழக மாணவர்களுக்கு மீண்டும் ஆன்லைன் வாயிலாக வகுப்புகள்? பள்ளிகளின் அதிர்ச்சி முடிவு!
தமிழகத்தில் கொரோனா பரவல் அதிகரித்து வருவதால் பள்ளிகள் மீண்டும் மூடப்பட அதிகளவு வாய்ப்பு உள்ளதாகவும், கற்றல் முறையை சீர் செய்வதை குறித்தும் தகவல் வெளியாகி பெற்றோர்களது குழப்பத்தை தீர்த்துள்ளது.
பள்ளிகள் மூடல்:
கொரோனா தொற்றின் காரணத்தால் கடந்த இரண்டு வருடங்களுக்கு தலைகீழாக மாறிய பல நாட்டின் கட்டுப்பாடுகள் நடப்பு ஆண்டின் ஆரம்பத்தில் தளர்த்தப்பட்டு வழக்கம் போல செய்லபட தொடங்கியது. அதில் முக்கிய பங்கில் இருப்பது கல்வி தான். அவ்விதமாக வைரஸ் தாக்கம் குறைந்த கையோடு அனைத்து பள்ளிகளும் திறக்கப்பட்டு நல்ல முறையில் நடைபெற்று கொண்டிருக்கும் இந்த சூழ்நிலையில் மீண்டும் கொரோனா உருவெடுத்து காட்டுத்தீ போல பரவி வருகிறது.
தமிழகத்தில் வேலையற்றோருக்கான உதவித்தொகை – ஆகஸ்ட் 30 கடைசி நாள்!
இவ்வாறு கடந்த சில வாரங்களாக தமிழகத்தில் கொரோனா பாதிப்பு தொடர்ந்து அதிகரித்து உயிரிழப்பின் எண்ணிக்கையும் நாளுக்கு நாள் கூடுகிறது. அதிலும் குறிப்பாக தலைநகர் சென்னை, செங்கல்பட்டு,காஞ்சிபுரம் மற்றும் திருவள்ளூர் உள்ளிட்ட மாவட்டங்களில் பாதிப்பு எண்ணிக்கை மீண்டும் வேகம் எடுத்துள்ளதால் தமிழக அரசு கட்டுப்பாடுகளை விதிக்க தொடங்கியுள்ளது. மேலும், பொது இடங்களில் மக்கள் அனைவரும் கட்டாயம் முகக்கவசம் அணிய வேண்டும் என்றும் இதனை மீறுவோருக்கு அபராதம் விதிக்கப்படும் என்றும் எச்சரிக்கையும் விடுத்துள்ளது.
Exams Daily Mobile App Download
இப்படி இருக்கையில் தமிழகத்தில் பள்ளிகள் மீண்டும் மூடப்படுமா? என்ற அச்சம் பெற்றோர்கள் மற்றும் மாணவர்கள் மத்தியில் எழுந்துள்ளது. ஒரு சில தனியார் பள்ளிகள் கொரோனா காலத்தில் பள்ளிகளில் சுழற்சி முறை வகுப்புகளை நடத்தியது போல மீண்டும் நடத்தலாமா என்பது குறித்தும் பெற்றோர்களிடம் கருத்துக்களை கேட்டு வருகிறது. எனவே நோய் பாதிப்பு தொடர்ந்து அதிகரிக்கும் பட்சத்தில் தொடக்கப்பள்ளி மாணவர்களுக்கு மட்டும் மீண்டும் ஆன்லைன் மூலமாக வகுப்புகளை நடத்துவது குறித்து தனியார் பள்ளிகள் பரிசீலித்து வருவதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.