தமிழகத்தில் வேலையற்றோருக்கான உதவித்தொகை – ஆகஸ்ட் 30 கடைசி நாள்!

0
தமிழகத்தில் வேலையற்றோருக்கான உதவித்தொகை - ஆகஸ்ட் 30 கடைசி நாள்!
தமிழகத்தில் வேலையற்றோருக்கான உதவித்தொகை - ஆகஸ்ட் 30 கடைசி நாள்!
தமிழகத்தில் வேலையற்றோருக்கான உதவித்தொகை – ஆகஸ்ட் 30 கடைசி நாள்!

படித்து முடித்து வேலையில்லாமல் திண்டாடி கொண்டிருப்பவர்களுக்கு தமிழக அரசின் சார்பில் உதவித்தொகை வழங்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் இந்த உதவித்தொகையை பெற கீழ் கொடுக்கப்பட்டுள்ள தகவலின்படி விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

உதவித்தொகை

தமிழக அரசின் வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித் துறை சார்பில் படித்து முடித்து வேலையில்லாமல் திண்டாடிக் கொண்டிருந்தவர்களுக்கு உதவித்தொகை வழங்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் மாதந்தோறும் பத்தாம் வகுப்பில் தேர்ச்சி பெறாதவர்களுக்கு ரூபாய் 200ம், பத்தாம் வகுப்பில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு ரூபாய் 300ம், பன்னிரண்டாம் வகுப்பில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு 400 ரூபாயும், பட்டதாரிகளுக்கு 600 ரூபாயும் வழங்கப்பட்டு வருகிறது.

தமிழகத்தின் 2 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை – வானிலை மையம் தகவல்!

மேலும் மாற்றுத்திறனாளிகளுக்கு பத்தாம் வகுப்பு மற்றும் அதற்கு கீழ் படித்தவர்களுக்கு ரூபாய் 600ம், 12ஆம் வகுப்பில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு ரூ. 750ம், பட்டதாரிகளுக்கு ரூபாய் 1000ம் வழங்கப்பட்டு வருகிறது. மேலும், இந்த உதவித் தொகை பெற விரும்புபவர்கள் வரும் செப்டம்பர் 30-ஆம் தேதிக்குள் விரைவில் விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும், விண்ணப்பிக்க நினைப்பவர்கள் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில் நெறி வழிகாட்டுதல் மையத்தை நேரில் அணுகி விண்ணப்பிக்கலாம் அல்லது ஆன்லைன் மூலமாகவே https://tnvelaivaaippu.gov.inwww.tnvelaivaaippu.gov.in என்கிற இணையதள முகவரி பக்கத்திற்கு சென்று விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Exams Daily Mobile App Download

மேலும் பத்தாம் வகுப்பு தேர்ச்சி மற்றும் தேர்ச்சி பெறாதவர்கள் அதற்கு மேற்பட்ட கல்வித் தகுதியுடன் வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்து 5 ஆண்டுகளுக்கு மேல் தொடர்ந்து புதுப்பித்திருக்க வேண்டும் மற்றும் மாற்றுத்திறனாளிகளும் பதிவு செய்து ஒரு வருடம் நிறைவடைந்திருக்க வேண்டுமெனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், விருப்பமும் தகுதியும் பெற்றவர்கள் விண்ணப்பத்தினை பூர்த்தி செய்து அந்த விண்ணப்பத்துடன் கணக்கு புத்தகம், ஆதார் கார்டு, ரேஷன் கார்டு மற்றும் அனைத்து கல்வி சான்றிதழ்களுடன் வரும் ஆகஸ்ட் 30-ஆம் தேதிக்குள் ஈரோடு மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில் வழிகாட்டல் மையத்திற்கு நேரில் சென்று சமர்ப்பிக்க வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!