தமிழகத்தில் பொறியியல் படிப்புகளுக்கு ஆன்லைன் விண்ணப்பம் – முக்கிய தகவல்!
தமிழகத்தில் பொறியியல் படிப்புகளுக்கான ஆன்லைன் விண்ணப்பப்பதிவு துவங்கி இருக்கும் நிலையில், இந்த ஆண்டு பழைய மாணவர்கள் பலர் விண்ணப்பித்திருக்க வாய்ப்புகள் இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
பொறியியல் விண்ணப்பம்
தமிழகத்தில் ஒவ்வொரு ஆண்டும் பொறியியல் படிப்பவர்களுக்கான மாணவர் சேர்க்கை பல்வேறு செயல்முறைகளில் நடத்தப்படுவது வழக்கம். அந்த வகையில் முதலாவதாக பொறியியல் படிப்புகளுக்கான ஆன்லைன் விண்ணப்ப பதிவு முடிவடைந்ததும் மாணவர்களுக்கு கவுன்சிலிங் நடத்தப்பட்டு பின்பு கல்லூரிகளில் இடம் வழங்கப்படும். அதைப்போல இந்த ஆண்டும் பொறியியல் படிப்புகளுக்கான மாணவர் சோகைக்கு ஆன்லைன் விண்ணப்பங்கள் தற்போது வரவேற்கப்பட்டு வருகிறது.
இப்போது பொறியியல் படிப்புகளுக்கான ஆன்லைன் விண்ணப்பப் பதிவு நடைபெற்று வரும் நிலையில் இந்த ஆண்டு சிறந்த கல்லூரிகளில் இடம் கிடைப்பதற்காக போட்டிகள் அதிகரிக்கலாம் என்று கல்வியாளர் ரமேஷ் பிரபா கருத்து தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் கூறும்போது, ‘கடந்த ஒரு சில நாடகளாக பொறியியல் படிப்புகளுக்கான ஆன்லைன் விண்ணப்ப பதிவு செயல்முறைகள் பரபரப்பாக போய்க்கொண்டிருக்கிறது. அந்த வகையில் நேற்று மாலை வரை சுமார் 59,000 பேர் பதிவு செய்துள்ளனர்.
Exams Daily Mobile App Download
குறிப்பாக அதில் 10,000 பேர் தங்களது சான்றிதழ்களை பதிவேற்றம் செய்துள்ளனர். இவர்கள் பழைய மாணவர்களாக இருப்பார்களா என்ற சந்தேகம் ஏற்பட்டுள்ளது. அதாவது, கடந்த ஆண்டில் பொறியியல் படிப்புகளுக்காக விண்ணப்பம் செய்து விரும்பிய கல்லூரிகள் கிடைக்காத மாணவர்கள் இந்த ஆண்டு மீண்டுமாக விண்ணப்பம் செய்துள்ளனர். அந்த வகையில் சான்றிதழ்களை சமர்ப்பித்து விண்ணப்பித்தவர்கள் பழைய மாணவர்களாகவும் இருக்க வாய்ப்புள்ளது. இதனால் இந்த ஆண்டு பொறியியல் படிப்புகளுக்கு விண்ணப்பிப்பதில் போட்டிகள் அதிகமாக இருக்கலாம்’ என்று தெரிவித்துள்ளார்.