தமிழகத்தில் ‘ஒரே நாடு ஒரே ரேஷன் கார்டு’ திட்டம் – மத்திய அரசு பெருமிதம்!

0
தமிழகத்தில் 'ஒரே நாடு ஒரே ரேஷன் கார்டு' திட்டம் - மத்திய அரசு பெருமிதம்!
தமிழகத்தில் 'ஒரே நாடு ஒரே ரேஷன் கார்டு' திட்டம் - மத்திய அரசு பெருமிதம்!
தமிழகத்தில் ‘ஒரே நாடு ஒரே ரேஷன் கார்டு’ திட்டம் – மத்திய அரசு பெருமிதம்!

இந்தியாவில் ஒரு நாடு ஒரு ரேஷன் அட்டை திட்டம் மூலம் பல ஏழை எளிய மக்கள் பயன் பெற்று வருகின்றனர். இத்திட்டத்தில் 56 கோடி பரிவர்த்தனைகள் நடந்துள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.

ஒரு நாடு ஒரு ரேஷன் திட்டம்:

ஒரு இந்திய குடிமகனின் முக்கிய ஆவணமாக ரேஷன் அட்டை உள்ளது. இந்த அட்டை மூலம் சாமானிய மக்கள் மலிவான விலையில் உணவு பொருட்களை வாங்கி வருகின்றனர். மத்திய அரசின் கரீப் கல்யாண் யோஜனா திட்டத்தின் கீழ் நாட்டு மக்கள் அனைவரும் ஒரு நாடு ஒரு ரேஷன் அட்டை திட்டத்தின் மூலமாக வெகுவாகப் பயன்பெற்றுள்ளனர். இந்த வகையில் “ஒரு நாடு ஒரு ரேஷன் அட்டைத் திட்டம்” மத்திய அரசால் 2019ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் தொடங்கப்பட்டது. இந்த திட்டம் புலம் பெயர்ந்து வாழும் மக்களுக்கு உதவும் நோக்கத்தில் கொண்டு வரப்பட்டது.

TN TRB தேர்வர்கள் கவனத்திற்கு – பொதுத்தமிழ் தமிழ் பாடக்குறிப்புகள்

ரேஷன் அட்டைதாரர்கள் தேவையான உணவுப் பொருட்களை ரேஷன் கார்டுகளை கொண்டு எந்த ஊரிலும் எந்த ஒரு ரேஷன் கடையிலும் வாங்கிக் கொள்ளலாம் என்பது இந்த திட்டத்தின் முக்கிய நோக்கமாகும். பொதுமக்கள் தங்கள் வேலைக்காகவோ , புலம் பெயரும் தொழிலாளர்களும் எந்த ஒரு தடையும் இல்லாமல் ரேஷன் கடை மூலம் உணவுப் பொருட்களைப் பெற்று கொள்ள இந்த திட்டம் உதவுகிறது. மேலும் இந்த திட்டம் பொதுமக்களிடம் அதிக வரவேற்பை பெற்றுள்ளது. மேலும் இந்த திட்டத்தின் மூலம் மொத்தம் 56 கோடி பரிவர்த்தனைகள் நடந்துள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.

பணத்தை தவறவிட்ட முதியவர், மீட்டுக்கொடுத்த மனிதாபிமான போலீஸ் – பொதுமக்கள் வாழ்த்து!

இது குறித்து மக்களவையில் எழுப்பப்பட்ட கேள்விக்கு நுகர்வோர் விவகாரங்கள் துறை இணை அமைச்சர் அஷ்வினி குமார் சௌபே ஒரு நாடு ஒரு ரேஷன் திட்டத்தில் நடைபெற்ற பரிவர்த்தனை குறித்து விளக்கம் அளித்துள்ளார். இந்தியாவில் ஒரு நாடு ஒரு ரேஷன் திட்டம் அமல்படுத்தப்பட்ட பிறகு, 2022 ஜனவரி 31ஆம் தேதி வரையில் மொத்தம் 56 கோடி பரிவர்த்தனைகள் நடைபெற்றுள்ளன. இந்த வகையில் பீகார் மாநிலத்தில் 2022 மே மாதத்தில்தான் ஒரு நாடு ஒரு ரேஷன் திட்டம் அமலுக்கு வந்தது. மேலும் பீகார் மாநிலத்தில் அதிகபட்சமாக 15.96 கோடி பரிவர்த்தனைகள் நடந்துள்ளன. இந்த வகையில் பீகாரைத் தொடர்ந்து ஆந்திரப் பிரதேசத்தில் 8.62 கோடி பரிவர்த்தனைகள் நடந்துள்ளன.

Velaivaippu Seithigal 2022

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!