1 முதல் 7ம் வகுப்பு மாணவர்களுக்கு முக்கிய அறிவிப்பு – மீண்டும் பள்ளிகள் திறப்பு!
ஒடிசாவில் இரண்டு வருடங்களுக்கு பிறகு 1 -7 வரையிலான வகுப்பு மாணவர்களுக்கு மீண்டும் பள்ளிகள் திறக்கப்பட்டுள்ளது. கொரோனா தொற்று முழுமையாக குறையாத நிலையில் அரசின் வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்ற அரசு அறிவுறுத்தியுள்ளது.
பள்ளிகள் திறப்பு:
இந்தியாவில் கொரோனா மூன்றாம் அலை பரவ தொடங்கி விட்டது. இரண்டாம் அலையில் உருமாற்றம் அடைந்த டெல்டா வகை வைரஸ் அதிக பாதிப்புகளை ஏறப்படுத்தியவாறு தற்போது ஓமிக்ரான் வைரஸ் மீண்டும் பாதிப்புகளை அதிகப்படுத்தி வருகிறது. அதனால் முன்னெச்சரிக்கையாக அரசு தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அந்த வகையில் பல மாநிலங்களில் இரவு நேர ஊரடங்கு மற்றும் பொது இடங்களில் கட்டுப்பாடுகள் போன்றவை அமலில் உள்ளது. அதனை தொடர்ந்து பள்ளிகளுக்கும் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. இதனால் மாணவர்களது கல்வி நிலை பாதிக்கப்பட்டது.
WhatsApp செயலி பயன்படுத்துவோர் கவனத்திற்கு – பேங்க் அக்கவுண்ட்டை நீக்குவது எப்படி?
மீண்டும் வகுப்புகள் ஆன்லைன் மூலமாகவே நடைபெற தொடங்கியது. அரசு நோய் தடுப்பு பணிகளில் தீவிரம் காட்டியதன் காரணமாக கொரோனா பாதிப்பு எண்ணிக்கை சரிய தொடங்கியது. இந்த நேரத்தில் பள்ளி மாணவர்களின் நலன் கருதி மீண்டும் பள்ளிகளை திறக்க தேவையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டது. மற்ற மாநிலங்களை தொடர்ந்து ஒடிசாவிலும் பள்ளிகளை திறப்பது குறித்து ஆலோசனை மேற்கொள்ளப்பட்டது. இதற்கிடையில் பஞ்சாயத்து தேர்தல் நடைபெற்ற நிலையில் பள்ளிகள் திறப்பானது தள்ளிவைக்கப்பட்டது.
அதன் பிறகு கடந்த 7ம் தேதி முதல் பள்ளி, கல்லூரி மீண்டும் திட்டமிட்டபடி திறக்கப்பட்டது. அதனை தொடர்ந்து தற்போது இரண்டு வருடங்களுக்கு பிறகு 1 -7 வரையிலான வகுப்பு மாணவர்களுக்கு மீண்டும் பள்ளிகள் திறக்கப்பட்டுள்ளது. பள்ளிகள் இன்று திறக்கப்பட்டுள்ள நிலையில் மாணவர்களுக்கு பூங்கொத்து மற்றும் திலகமிட்டு ஆசிரியர்கள் வரவேற்றனர். இதனால், பள்ளி மாணவர்களுக்கு பண்டிகை காலம் போன்ற உணர்வு ஏற்பட்டது. மேலும் கஜபதி மாவட்டத்தில் உள்ள ஒரு பள்ளியில் மேளம் அடித்து மாணவர்களை வரவேற்றனர். மேலும் தொற்று முழுமையாக குறையாத நிலையில் அரசின் வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்ற அரசு அறிவுறுத்தியுள்ளது.