மத்திய அரசு ஊழியர்களுக்கு மீண்டும் பழைய ஓய்வூதிய திட்டம் அமல் – வலுக்கும் கோரிக்கை!

0
மத்திய அரசு ஊழியர்களுக்கு மீண்டும் பழைய ஓய்வூதிய திட்டம் அமல் - வலுக்கும் கோரிக்கை!
மத்திய அரசு ஊழியர்களுக்கு மீண்டும் பழைய ஓய்வூதிய திட்டம் அமல் - வலுக்கும் கோரிக்கை!
மத்திய அரசு ஊழியர்களுக்கு மீண்டும் பழைய ஓய்வூதிய திட்டம் அமல் – வலுக்கும் கோரிக்கை!

மத்திய அரசு ஊழியர்களுக்கு பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்த வேண்டும் என்ற நீண்ட கால கோரிக்கைகளுக்கு அரசாங்கம் செவி கொடுக்காவிட்டால் ஊழியர் சங்கம் சார்பில் போராட்டங்கள் வலுக்கும் என்று தகவல்கள் பெறப்பட்டுள்ளது.

பழைய ஓய்வூதிய திட்டம்

அரசு ஊழியர்களுக்கு பழைய ஓய்வூதிய முறையை மீண்டும் அமல்படுத்துவது தொடர்பாக மத்திய அரசு தனது சமீபத்திய கருத்தை தெளிவுபடுத்தியுள்ளது. தற்போதுள்ள NPS அதாவது ‘தேசிய ஓய்வூதியத் திட்டத்தை’ அரசாங்கம் திரும்பப் பெறாது என்றும் பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்தும் எண்ணம் அரசுக்கு இல்லை என்றும் தகவல்கள் வெளியாகியுள்ளது. மறுபக்கத்தில், ஊழியர் சங்கங்களின் அணுகுமுறையைப் பார்க்கும்போது வரும் 2024ம் ஆண்டு நடைபெறும் லோக்சபா தேர்தலுக்கு முன்பாக மத்திய அரசுக்கு அழுத்தம் கொடுக்கும் வகையில் பல்வேறு ஊழியர் அமைப்புகள் வியூகம் தயாரித்து வருவதாக தெரிகிறது.

தமிழகத்தில் ஜூன் 13ம் தேதி முதல் பள்ளிகள் திறப்பு? அமைச்சர் முக்கிய தகவல்!

ஏனென்றால் தேர்தல் நேரத்தில் ஊழியர் அமைப்புகள் மற்றும் அரசியல் கட்சிகளின் கோரிக்கைகளை மத்திய பாஜக அரசால் நிராகரிக்க முடியாது. காரணம் என்னெவென்றால் பழைய பென்ஷன் பிரச்னையில், இப்போது மத்திய அரசு ஊழியர்களுடன் பெரும்பாலான மாநில அரசு ஊழியர் சங்கமும் ஒன்று திரண்டுள்ளது. இதற்கிடையில் கடந்த வாரம் வெளியான ஒரு செய்தியில், ஊழியர்களின் நலன் கருதி மீண்டும் பழைய ஓய்வூதிய முறையை அமல்படுத்தும் நோக்கில் மத்திய அரசு நடவடிக்கை எடுத்து வருவதாக கூறப்பட்டிருந்தது. ஆனால், இந்த செய்தி போலியானது என அமைச்சரவைக் கூட்டத்தின் போது PIB குறிப்பிட்டது.

Exams Daily Mobile App Download

உண்மையில் பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்துவது எதுவும் அரசாங்கத்தின் பரிசீலனையில் இல்லை என்று கூறியது. இந்த நிலையில் பாரதீய பாதுகாப்பு மஸ்தூர் சங்கத்தின் பொதுச் செயலாளரும், பாதுகாப்பு அமைச்சகத்தின் ஜே.சி.எம்-2 நிலைக் குழு உறுப்பினருமான முகேஷ் சிங் கூறுகையில், ‘பழைய ஓய்வூதிய முறையை அரசு அமல்படுத்த வேண்டும். மத்திய அரசு NPS-ஐ ரத்து செய்ய விரும்பவில்லை என்றால், தொழிலாளர்களுக்கு வழங்கப்படும் கடைசி ஊதியத்தில் பாதியளவு ஓய்வூதியத்தை நிபந்தனையுடன் வழங்க வேண்டும். இது மட்டுமின்றி, அகவிலை நிவாரண தொகையையும் இணைக்க வேண்டும்’ என்று பேசினார். இந்த விஷயத்தில் மத்திய அரசு எந்த ஒரு சாதகமான முடிவையும் விரைவில் எடுக்கவில்லை என்றால், மத்திய பணியாளர்களின் போராட்டம் நடப்பது நிச்சயம் என்று எதிர்பார்க்கப்பட்டுள்ளது.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!