தமிழகத்தில் ஜூன் 13ம் தேதி முதல் பள்ளிகள் திறப்பு? அமைச்சர் முக்கிய தகவல்!

0
தமிழகத்தில் ஜூன் 13ம் தேதி முதல் பள்ளிகள் திறப்பு? அமைச்சர் முக்கிய தகவல்!
தமிழகத்தில் ஜூன் 13ம் தேதி முதல் பள்ளிகள் திறப்பு? அமைச்சர் முக்கிய தகவல்!
தமிழகத்தில் ஜூன் 13ம் தேதி முதல் பள்ளிகள் திறப்பு? அமைச்சர் முக்கிய தகவல்!

தமிழகத்தில் கோடை விடுமுறை முடிந்து வரும் ஜூன் 13ம் தேதி முதல் புதிய கல்வியாண்டுக்கான வகுப்புகள் மீண்டும் துவங்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், இந்த அறிவிப்பில் எந்த மாற்றமும் இருக்காது என்று அமைச்சர் அன்பில் மகேஷ் விளக்கம் அளித்துள்ளார்.

பள்ளிகள் திறப்பு

தமிழகத்தில் கடந்த 2021-22ம் கல்வியாண்டிற்கான வகுப்புகள் முடிவடைந்து மே மாதம் 14ம் தேதி முதல் அனைத்து பள்ளி மாணவர்களுக்கும் கோடை விடுமுறை அறிவிக்கப்பட்டது. இப்போது விடுமுறை முடிந்து வரும் ஜூன் 13ம் தேதியன்று அனைத்து வகுப்புகளுக்கும் பள்ளிகள் மீண்டும் திறக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் பள்ளிகள் திறப்பில் மாற்றங்கள் இருப்பதாக வெளிவரும் தகவல் குறித்து பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி விளக்கம் அளித்துள்ளார். அதாவது, தமிழகத்தில் பள்ளிகள் திறக்கும் தேதியில் எந்தவித மாற்றமும் இல்லை என அவர் குறிப்பிட்டுள்ளார்.

TN Job “FB  Group” Join Now

அந்த வகையில், தமிழகத்தில் அனைத்து பள்ளி மாணவர்களுக்கும் கோடை விடுமுறை முடிவடைந்து 2022 – 23ம் கல்வியாண்டுக்கான வகுப்புகள் வரும் 13ம் தேதியன்று மீண்டுமாக திறக்கப்பட உள்ளன. இதற்கான ஏற்பாடுகள் முழு வீச்சில் நடைபெற்று வருகின்றது. இதற்கிடையில் தமிழகத்தில் சென்னை, செங்கல்பட்டு உள்ளிட்ட ஒரு சில மாவட்டங்களில் கொரோனா பாதிப்புகள் மீண்டும் அதிகளவு பதிவு செய்யப்பட்டு வருகிறது. இதனால் திட்டமிட்டபடி பள்ளிகள் மீண்டும் திறக்கப்படுமா என்ற கேள்வி மக்கள் மத்தியில் எழுந்தது. ஆனால், இந்த முறை பள்ளிகள் திறப்பில் எந்தஒரு மாற்றமும் இருக்காது என பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி விளக்கம் கொடுத்துள்ளார்.

தமிழகத்தில் தீவிரமடையும் கொரோனா – மாவட்ட ஆட்சியர்களுக்கு பறந்த உத்தரவு!

இது குறித்து அமைச்சர் பேசுகையில், ‘தமிழகத்தில் 1 முதல் 10ம் வகுப்பு வரையுள்ள அனைத்து மாணவர்களுக்கும் ஜூன் 13ம் தேதியன்று பள்ளிகள் மீண்டுமாக திறக்கப்படும். அதே போல 12ம் வகுப்புகளுக்கு 20ம் தேதியும், 11ம் வகுப்புகளுக்கு 27ம் தேதியும் பள்ளிகள் துவங்கும். இப்போது கொரோனா பரவல் பாதிப்புகளால் முழு ஊரடங்கு கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்பட்டால் இது குறித்து அதிகாரிகள் தெரிவிப்பார்கள். அதற்கு பிறகு பள்ளிகள் திறப்பில் மாற்றங்கள் இருந்தால் தெரிவிப்போம். இதற்கிடையில் பொதுத் தேர்வு எழுதாத மாணவர்களுக்கு ஜூலை மற்றும் செப்டம்பர் மாதங்களில் தேர்வு நடைபெறும்’ என்று கூறியுள்ளார்.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!