தமிழக அரசு மதுபான கடை ஊழியர்களின் சம்பள உயர்வு எப்போது? மார்ச் 7ல் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்!
தமிழகத்தில் அரசு மதுபான கடைகளில் கடந்த 20 ஆண்டுகளாக பணிபுரிந்து வரும் ஊழியர்களுக்கு ஊதிய உயர்வு வழங்கப்படாமல் உள்ளது. மேலும் இது போன்ற பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி வருகிற மார்ச் 7ம் தேதி அன்று கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என மாநில டாஸ்மாக் ஊழியர் சம்மேளன குழுக் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
மதுபான கடை ஊழியர்
தமிழகத்தில் அரசு ஊழியர்களுக்கு பல்வேறு சலுகைகள் வழங்கப்பட்டு வருகிறது. அதன்படி ஆண்டுக்கு இருமுறை அகவிலைப்படி உயர்வு, சம்பள உயர்வு ஆண்டுதோறும் வழங்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில், அரசு மதுபான கடைகளில் பணிபுரிந்து வரும் ஊழியர்களுக்கு கடந்த 20 ஆண்டுகளாக ஊதிய உயர்வு வழங்கப்படாமல் உள்ளது. அதனால் தங்களுக்கு ஊதிய உயர்வு வேண்டும் என்று தொடர்ந்து கோரிக்கை வைத்து வருகின்றனர்
Follow our Instagram for more Latest Updates
இந்த நிலையில் திருவள்ளூர் மாவட்ட சி.ஐ.டி.யு அலுவலக வளாக கூட்டரங்கத்தில் மாநில டாஸ்மாக் ஊழியர் சம்மேளன குழுக் கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் அரசு மதுபான கடைகளில் பணிபுரிந்து வரும் ஊழியர்களுக்கு ஊதியத்தை உயர்த்தி வழங்க வேண்டும் என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இதையடுத்து ஊழியர்களை காலி பாட்டில்களை திரும்ப பெறும் பணியில் ஈடுபடுத்த கூடாது என்றும் வலிறுத்தப்பட்டுள்ளது.
அத்துடன் நீதிமன்றங்களில் மதுபான கடைகளில் பணிபுரிந்து வரும் தொழிலாளர்கள் தொடர்பான வழக்குகளை காலதாமதமின்றி விசாரணை மேற்கொள்ள வேண்டும் என்றும் அரசு மதுபான கடைகளுடன் உரிமம் பெறாமலே பார்களை நடத்த அனுமதி கூடாது. இதனால் அரசுக்கு இழப்பீடு ஏற்படக்கூடும். மேற்கண்ட கோரிக்கைகளை வலியுறுத்தி வருகிற மார்ச் 7ம் தேதி அன்று டிஎம்எஸ் வளாகத்தில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப்பட இருப்பதாக கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது.